Monday, 1 April 2013

கடல்

கடல் படத்தின் நஷ்டத்தை கண்டு கொந்தளித்து ஆளாளுக்கு தங்கள் வலைத்தளத்தில் எழுதி ஜெயமோகன் மற்றும் மணிரத்னத்தின் மீதுள்ள கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நாலாந்தர விமர்சனங்களை படித்த எனது சில எண்ணங்கள்..

கடல் படத்தை ஜெயமோகன் எழுதினார்.. மணிரத்னம் இயக்கினார்.. படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.. இது குறித்து கவலை பட வேண்டியது விநியோகஸ்தர்கள்.. ஒரு சராசரி ரசிகனுக்கு படத்தின் கலை மட்டுமே திருப்தி அளிக்க வேண்டும்.. அதன் வசூல் அல்ல.. ஹலோ தமிழ்சினிமா என்ற ஒரு தளத்தில் மணிரத்னத்திற்கு உலக சினிமா தெரியாது என்று எழுதியுள்ளனர். (எழுதியவருக்கு தெரியுமோ என்று தெரியாது.) உலக சினிமா தெரியாத ஒரு இயக்குனருக்கு வெனிஸ் திரைப்பட திருவிழாவில் "Glory to the Filmmaker" விருது வழங்குகின்றனரா? பெர்லின் திரை திருவிழாவில் இருவர் படம் சிறந்த படமாக தேர்வானது.. ஆனால் இந்த ஹலோ தளம் "இருவர் ஒரு flop.. அதை போல் கடலும் flop.." என்று எழுதியுள்ளது..

கலையை ஒரு துளி கூட கலை என பார்க்காமல் வெறும் வியாபாரமாக பார்க்கும் இது போன்ற கிருமிகள் இப்போது இணையம் எங்கும் வியாபித்து உள்ளன.. ஜிம்பாப்வே, லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகெங்கும் விருதுகள் பெற்ற படங்கள் மணிரத்னம் எடுத்தவை.. அது பற்றி அவர் பெருமையாக பேசியது இல்லை.. ஆனால் இந்த தன்னார்வ விமர்சகர்களின் நோக்கம் மணிரத்னத்தின் புகழை மறைத்து அவர் ஒரு சாதாரண இயக்குனர்.. அவரது வெற்றிகள் அதிர்ஷ்டம் என்றும், தோல்விகள் அவரால் ஏற்பட்டவை என்றும் காட்ட நினைக்கிறார்கள்.. சூரியனை நோக்கி கையை நீட்டி சூரியன் மறைந்துவிட்டதே என்று சொல்லும் ஒரு வகை மன திருப்தி பெறுகிறார்கள்..

இன்னும் சிலர் திரிகிறார்கள்.. மணிரத்னம் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.. அதன் மூலம் ராஜாவின் புகழ் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.. இந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு இசை அமைக்கும் ரஹ்மான் முன்  தங்கள் ஆதர்ச இசையமைப்பாளர் படங்கள் பேசப்படுவதில்லையே என்ற ஆழமான எண்ணம் இவர்களை இசையை இசையாக கேட்க விடுவதில்லை.. ரஹ்மானின் மிக சிறந்த பாடல்களை கூட சலிப்புடன் நிராகரிப்பார்கள்.. இந்த காழ்ப்புணர்ச்சியின் நீட்சியே ரஹ்மானை அறிமுகம் செய்த மணிரத்னத்தின் மீது வைக்கும் அபத்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம்..

கடல் :: பாவத்துக்கும், மீட்புக்கும் இடையே அலையும் இளைஞனின் கதையென பார்க்காமல் வெறும் ஹீரோ - வில்லன் என்ற ரீதியில் பார்க்கவே இவர்கள் பழகி உள்ளனர்.. படத்தின் படிமங்கள் இவர்களுக்கு புரிவதில்லை.. புரிய இவர்கள் முனைவது கூட இல்லை.. இவர்கள் உள்நோக்கம் படத்தை கடுமையாக விமர்சிப்பது.. படத்தின் குறைகளை மட்டும் குறித்துக்கொள்வது.. தன் தளத்தில் தனக்கு புரிந்த கதையை அசட்டு நகைச்சுவையுடன் எழுதி ட்வீட்டரில் பகிர்வது.. இந்த ஆதார குறிக்கோளுடன் வருபவர்களுக்கு பியா போன்ற தேவதை தன்மை நிறைந்த கதாபாத்திரம், தாமஸ் பாவமன்னிப்பு பெறும் ஆன்மீக படிமங்கள், கிறிஸ்துவத்தின் சாயலில் அமைந்த வசனங்கள், ஊரை ஆசீர்வதித்து நகர்த்தி செல்லப்படும் இயேசு சிலை என எதுவும் புரிவதில்லை..

செந்தில் போன்ற சில அமெச்சூர் விமர்சகர்கள் கடலில் முத்தக்காட்சி நீக்கப்பட்டது குறித்து கோபப்படுகிறார்கள்.. இதுதான் இவர்கள் ரசனை.. இவர்களுக்கு தேவை இதுதான்.. அதற்கான படங்களுக்கு செல்லாமல் மணிரத்னத்தின் படங்களுக்கு ஏன் செல்கிறார்கள்? இவர்கள் விமர்சனம் செய்வது தவறு அல்ல.. படம் வெளியான முதல் நாளே பார்த்து, தனக்கு புரிந்த ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து விமர்சித்து, 3000, 4000 பேருக்கு பகிர்ந்து, அனைவரையும் அதன் கலையுணர்ச்சியை புரிய அல்ல உணர விடாமல் செய்யும் இந்த கலைக்கொலை எத்தகைய கொடுமையானது..

சுஜாதா சொன்னது போல் "மணிரத்னம்" மணிரத்னம் என்பதாலேயே அவரை நிராகரிக்க பலர் உள்ளனர். அது தான் இப்போது ஜெயமோகனுக்கும் நடக்கிறது.. முன்னோடிகளின் சிரமம்.. விளக்கை சுற்றி திரியும் விட்டில் பூச்சிகள் போல் தான் இவர்களை பற்றி எழுதும் விமர்சகர்களும்.. அவர்கள் ஒளியில் வாழ்ந்து, புகழில் எரிந்து சாபவர்கள்..

Monday, 18 March 2013

ஈழம்!

இலங்கை தமிழர் நலன் கருதி நடக்கும் உண்ணாவிரதம் தற்சமயம் கலை கல்லூரி மாணவர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. பொறியியல் மாணவர்களையும் பங்கு பெற சொல்லி எங்கும் தீவிர பிரசாரம் நடக்கிறது..

இந்த விஷயத்தை அரசியல், மனித நேயம் இந்த இரு வட்டத்துக்குள் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை.. தனி மனிதர்களாக ஒவ்வொரு தமிழனும் செய்த தவறு தான் இன்று ஈழத்தின் நிலைக்கு காரணம்.. ஏதோ ஒரு விதத்தில் நீங்களும், நானும் பிரபாகரன், பாலச்சந்திரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக்கு காரணமாய் உள்ளோம்..

இராஜபக்சே விருந்தினராக திருப்பதி சென்ற போது நாம் எந்த கிளர்ச்சியும் காட்டவில்லை .. பிரபாகரன் தாயார் ஒரு சிகிச்சைக்காக இங்கு வந்து திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. மில்லியன் கணக்கான மக்கள் 2010, 2011ல் கொல்லப்பட்டனர். அப்போதும் எந்த தீவிர போராட்டமும் நடக்கவில்லை.. பல ஆண்கள் நிர்வாணமாக சுட்டு கொல்லப்பட்டனர்.. அதை வீடியோவாகவும் பார்த்தோம்.. அப்போதும் எதுவும் செய்யவில்லை.. மொத்தத்தில் நாம் தேவைப்படும் போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை ..

இப்போது வெறும் உணர்ச்சிகரமான பிரச்சனையாக இதை பார்த்தல் சரி தானா? ஆட்சி மாற்றம் இலங்கையில் வருவதற்கு முன், இந்தியாவில் அல்லவா வர வேண்டும்?.. ஏதோ ஒரு அரசியல் ஆதாயம் இங்கு ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் உள்ளது.. இல்லையென்றால் கோடி மக்கள் கொல்லப்படும் போது ஒரு நாடே வேடிக்கை பார்த்திருக்காது..

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, ஜெகன் இலங்கையில் கொல்லப்பட்ட போது இங்கு ஒரு மாபெரும் கிளர்ச்சி நடந்தது.. நாம் சற்று கத்தி பின் ஓய்ந்தோம்.. இப்போது மீண்டும் அதே கதை நிகழ்கிறது..

உண்ணாவிரதம் இருபவர்களின் நோக்கம் தூய்மையானது.. அதை வரவேற்கிறேன்.. நம் போராட்ட முறை இந்த பிரச்சனைக்கு ஏற்றதா? இதுவே என் கேள்வி..

இது போன்ற சூழ்நிலையில் போராட்டதிற்கு எதிரான கேள்விகளை வைத்தால் "உனக்கு தமிழ் உணர்வு இல்லை.. இன உணர்வு இல்லை.. உன் குடும்பத்திற்கு இது நடந்தால் தெரியும்..:" என்று உணர்ச்சிவசப்பட தொடங்கிவிடுகிறார்கள்.. அதனால் ஒன்று "போராடு" இல்லை "சும்மா இரு" என இரண்டே கட்டத்துக்குள் தள்ளி விடுகிறார்கள்..

தற்போது இருக்கும் சொச்சம் தமிழர்களை முழுமையாக இங்கு அழைத்து வரலாம்.. ஏனெனில் சத்தம் இல்லாமல் பல சித்ரவதைகளை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.. ஆனால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்கு ராஜபக்சேயோ, மன்மோகனோ செவி சாய்க்க வேண்டும்..

அது நடக்கும் காரியமா என்பது தேவனுக்கே வெளிச்சம்.. 

தமிழீழ பிரச்சனை குறித்து இன்று எனது கல்லூரி மாணவர்களும் போராட்டம் செய்ய இருப்பதாக கேள்வி..

எளிதாக மாறும், உணர்ச்சிவசப்பட கூடிய மனநிலை உடைய பிரிவில் மாணவர்களும் உண்டு.. அவர்கள் "Emotional Intteligent" ஆக செயல்படுவது இல்லை.. இது இந்த விஷயத்தில் மட்டும் அல்ல.. பல கல்லூரி உள்விவகாரங்களில் கூட நான் பார்த்ததே.. அரசையோ, கல்லூரி நிர்வாகத்தையோ எதிர்க்கும் மனப்பான்மைக்கு எப்போதும் பல மாணவர்கள் தயாராக உள்ளனர்.. பற்ற வைத்தவுடன் கொளுத்த நினைக்கிறார்கள்..

போராட்டத்தின் விளைவுகள் நல்ல முடிவோ, இதே நிலையோ எதை தந்தாலும், போராட்டம் செல்லும் வழியில் எனக்கு உடன்பாடு இல்லை.. குறிப்பாக நேற்று நடந்த பல சம்பவங்கள் அதிர்ச்சி தருபவை..

சென்னை வந்த புத்த பிட்சுக்கள் அடித்து காயப்படுத்தப்பட்டது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.. தவறு செய்யாத தமிழ் மக்கள் அங்கு துன்புறுத்தப்பட்டது உண்மை.. அதன் பழியை இங்கு கழுவுவதா? சிங்களர்கள் அனைவரையும் ராஜபக்சே என நினைக்கும் மனநிலை பரவியுள்ளது..

மேலும் மதுரையில் ஒரு மாணவர் தீக்குளித்து இறந்ததாய் அறிந்தேன்.. இதன் நோக்கம் என்ன? பல மாணவர்களின் முகநூல் பதிவில் ராஜபக்சே கொடூரமாக கொல்லப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.. பொதுவாக இந்த எண்ணம் தான் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது.. தற்சமயம் இந்த ஈழ பிரச்சனை பெரும் உருவம் எடுக்க காரணம் பாலச்சந்திரன் மரணம்.. ஆக ஒரு உயிரை கொன்றதற்கு, இன்னொரு உயிர் பலி வேண்டும்.. அதை நிறைவேற்ற மற்றொரு உயிர் தன்னை அழித்துக்கொள்கிறது..

நாளை வரப்போகும் எந்த நல்ல தீர்வுக்கும் ஒரு தீக்குளிப்பு தான் விதையாக இருக்குமென்றால் அதற்கு ஜனநாயகமும், அமைச்சர்களும் தேவை இல்லை.. சுதந்திர உலகத்தில், இந்தியா போன்ற சுதந்திர தேசத்தில் உயிர் பலியிட்டு உரிமையை மீட்க தேவையில்லை..

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஒரு ஈழத்தமிழ் பெண் கூறியது, "தமிழர்கள் இங்கு செய்யும் ஒவ்வொரு போராட்டத்திற்கும், இங்கு நாங்கள் பாதிக்கப்படுவோம்.. நாங்கள் இப்போது தான் மீண்டு வருகிறோம்.. மீண்டும் ஒரு போரையோ, தாக்குதலையோ எங்களால் தாங்க முடியாது.." இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. தமிழர்களை அங்கு வைத்துகொண்டு நாம் இங்கு இலங்கையை எதிர்த்து தீவிர வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வளவு தூரம் நன்மை தரும் என்று தெரியவில்லை..

கல்லூரிகள் அவசரமாக காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்ட பின் போராடுவது அரசை எதிர்க்கும் போக்கென கொள்ளப்படும்.. முகநூலும், மீடியாவும் தூண்டிவிடும் போது மாணவர்கள் மிக வேகமாக, உணர்ச்சிவசப்பட்டு செயல்படுதல் சரியல்ல..

காலம் தாழ்த்தி நடத்தப்படும் இந்த போராட்டம் முறையான வழியில் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.. அது மட்டுமே தீவிர மாற்றத்தை தரும்.. வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல..

Thursday, 17 January 2013

K.B sir is a Great guru :: Saran


This is my interview with Saran. He is a junior artist. He is a lucky guy working with legends like Maniratnam, K.Balachander and Kamal at an early age of his carrier. Here goes my interview regarding his experience in Kadal and Cine field in general.

Tell me about your Name, Native and Education.

My name is B.Saran and my native is Chennai only. I am studying 11th standard in St.Marys Boys school at Perambur.

                                                

You have done your first screen role in "Mudhal idam" film? How did you get the chance? 

By seeing "Variety".

Variety means?

Variety is a book, full of phone numbers of Artists in Cine field.

Fine.. How was your working experience in "Kadal"?

Wow! It was an amazing experience. I didnt expected this chance to act in a Maniratnam film. I am a fair boy but mani sir thought that i would be suitable for this role. Assistant directors Dhana and Sarjun sir gave me full practice regarding slang and flow for each and every dialogue. All the scenes that were shot in the sea were really a great experience. They changed me totally upside down. My big thanks is to Maniratnam sir and whole Kadal unit.

                                                  

You have also acted in "Vishwaroopam". How it was working with Kamal sir?

I did three scenes in that film including one scene with Kamal sir. It was also great time. But working in Kadal was really superb.

                                             

Working with a legend like Balachander sir?

It is a honour to work in K.B sir's serial. I am working on two of his serials. How lucky i am! He creates each scene. It is a wonderful time to train myself as an actor. In the beginning, I was angry since he scolded me. Later I realised he scolded only for my sake. With the passage of time, he became more affectionate with me. Still i wonder about his punctuality. He comes to spot by 8 A.M and leaves by 8 P.M. He is a great GURU.

                                             

Your upcoming films?

Just now Vishal's Samar got released. Now, I am eager about Kadal Kadal Kadal..

Finally, What is your future dream?

To become an engineer or an actor.

Tuesday, 15 January 2013

KOCHADAYAAN Lyrics :: Vairamuthu


                                                         
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்...
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...

இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்

வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம் ?

Asku laska :: NANBAN :: Lyrics


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே -
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ - ஒரு
காதல் உந்தன் மேலே!

அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன்
காதலைக் காட்டினேன்...

ஏனோ தன்னாலே உன் மேலே
காதல் கொண்டேனே!
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே!

ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு
வளைகோடு
நான் ஆய்கிறேன்!

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

தேஜாவூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி - நீ
வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என்
பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ - ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

Anbin vaasale :: Lyrics by Karky


நீ இல்லையேல்
நான் என் செய்வேன்?

அன்பின் வாசலே
அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவை
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்

நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ வான் மண் நீர் தீ...
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே

கண்ணீரைத் தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால்
பூப்பூத்திடாதோ

பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே

அன்பின் வாசலே
அன்பின் வாசலே

Elay keechaan :: Lyrics by Karky


ஏமா சீலா -நம்ம
கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ
அலைவீசி சிரிக்குறா

ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
கட்டு மரம் கொண்டா லே!
குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!

ஏளா! பாய் விரிச்சா... அய்யோ
வாவல் வாசந் தேடி
வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
றாலோட றாலோட மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
புலிவேசம் போட்டு வருவான் கீச்சான்

ஹே... சடசட சடவென காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஒம் பேர பாடாதா?
ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர

ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
நீ வேணா சொன்னா
எங்க எங்க போவானோ தோமா?

ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

நீ திடுதிடுக்க - என்ன
சுத்தி வளைக்க - நான்
வெலவெலக்க - தல
கிறு கிறுக்க

நீ பாத்த நொடியே - ஹே
பித்துப் பிடிக்க - என்
தூத்துக்குடியே ஒன்ன
தூக்கி இழுக்க! தூக்கி இழுக்க!

ஏ இத்தன மச்சம் - ஹே
எத்தன லட்சம் - அத
எண்ணி முடிச்சே - நாம
தூக்கம் தொலச்சோம்

ஏ ஒத்த பிடியா - நீ
மொத்தம் கொடுத்த - என்
அன்ன மடியா - என்ன
வாரி எடுத்த! வாரி எடுத்த!

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
ஏலம் போடக் கொண்டாலே!
போகும் மேகம் மீனத் தூவும் கொண்டா லே!