Tuesday 18 June 2013

அம்பிகாபதி - "உன்னால் உன்னால்" - வைரமுத்து

என் வானம் விடிவது உன்னாலே..
என் வாசல் திறப்பது உன்னாலே..
என் வீதி நிறைவது உன்னாலே..
என் நிலவும், வெயிலும், மழையும், குளிரும்,
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. பேரன்பே..
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. பேரன்பே..

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கண்மணி பாசம் பேசும்..
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்..

என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்..
என் மௌனத்தில் குழைகின்ற வார்த்தை உன்னால்..
என் முகத்தில் முளைக்கின்ற முடியும் உன்னால்..
என்னை மோட்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்..
நான் முடிகின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்..

நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்..
கண்ணால்.. கண்ணால்.. கண்ணால்.. பேரன்பே,..
தீ போல் ஏனிங்கு சந்தித்தோம்?
சொல்லின்றி பாரம் கொண்டோம்..
துன்பம் கண்டோம்..
ஏன் காதல் சிந்தித்தோம்?
ஏன் வந்தாய் நீயாக?
பஞ்சோடு தீயாக..

உன்னால்..
நான் பாடும் பாடல் உன்னால்..
நான் பருகும் நீரும் உன்னால்..
என் நாளும் கோளும் உன்னால்..
என் நன்மை தீமை உன்னால்..
என் கண்ணில் கண்ணீர் உன்னால்..
அதில் காயும் புன்னகை உன்னால்..
என் உரிமை பொருளும் உன்னால்..
என் உயிரும் உன்னால்..

கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..
கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..

நீ அமுத மழையா?
அமில மழையா?
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா?
எனது வலியறியும் உனது இதயம் கொடு..
ஏ.. வளர்பிறை அழகினை ஒருமுறை தொழ விடு..
என் பேர் சொல்லும் பேரன்பே வா..

உள்ளன்பை மறைக்கவொண்ணாது..
உன் போன்ற பெண்ணால்..
உன் பார்வை அருள் செய்ய வேண்டும்..
ஒளி ஊறும் கண்ணால்..

என் காதல் வேண்டாமென்று
ஓர் வார்த்தை சொன்னால்..
ஏழ்வண்ண வானவில் கூட
நிறம் மாறும் தன்னால்..

உன்னால்.. உன்னால்.. உன்னால்.. உன்னால்.. என் ஜென்மம்..
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. உன்னால்.. என் ஜென்மம்..

நான் தனிமையில் சிரிப்பதும் உன்னால்..
சில சபைகளில் அழுவதும் உன்னால்..
நான் பந்தியில் அமர்வதும் உன்னால்..
சிறு பட்டினி கொள்வதும் உன்னால்..
என் சந்திரன் வருவதும் உன்னால்..
என் ஜனனமும் மரணமும் உன்னால்..

என் உயிர் என்வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் மொழி கேட்பதும் கேட்பதும்
என் வழி நல்வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லறம் காப்பதும் காப்பதும்..
அது உன்னால்..
அது உன்னால்..
அது உன்னால்..