Thursday 27 February 2014

ராஜனோடு ராணி வந்து சேரும்..

"கங்கைக்கொரு வங்க கடல் போல் வந்தான்.. அவன் வந்தான். 
மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான்.. அவன் தந்தான். 
கண்ணில் என்ன வண்ணங்கள்?
சின்ன சின்ன மின்னல்கள்..
ஓர் காதல் பூத்ததோ?
தக்கத்துணை வாய்க்காமல், பெண் வாடினாளோ?
பக்கம் வந்து கை சேர, பண் பாடினாளோ?
ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம் தான்..
 
ராஜனோடு ராணி வந்து சேரும்..
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்..
"

நான் ஒரு sapio-sexual. (One who finds intelligence the most sexually attractive feature). அதாவது எனது காதல் என்பது அறிவு சார்ந்தே அமையும் என்று எண்ணுபவன். ஒரு பெண்ணின் intellectual side, நுணுக்கமான உணர்வுகள், மனிதர்களை அவள் அணுகும் விதம், கலை - இசை - இலக்கியம் குறித்த அவளது பார்வையே அவள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அழகை மட்டுமே சுமந்திருக்கும் பெண்கள் மீது எனக்கு aversion தான் அதிகம் ஏற்பட்டிருக்கிறது. தன் மனதினை பின்பற்ற தெரிந்த ஆணின் - பெண்ணின் தேடல் தானே காதல்! அதை மீறி அழகு மட்டுமே முதலிடம் வகிக்கும் காதல்களில் சலிப்பு தட்டிவிடும் என்பதென் கருத்து!

பாலு சார் வாழ்க்கையின் resemblance அவரது பல படங்களில் முக்கியமாக இந்த களத்தில் வெளிவந்திருக்கிறது. ரசனையான ஒரு பெண்ணிடம் தன் மனதின் அலைக்கழிப்புகளுக்கு ஒரு வடிகால் தேடும், விரக்தியில் இருக்கும் ஒரு ஆண் காதலுறுவது.. 

                                  

இங்கே ஒரு ஆணின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவனை மையல் கொள்ள செய்கிறாள் ஒரு பெண்! அவளிடம் இருக்கும் spark அவனை ஈர்த்துக்கொள்கிறது. அதில் இருக்கும் தார்மீக நெறி மீறல்கள், பின் விளைவுகள் எதையும் யோசிக்காமல் அவளோடு ஒரு உறவினை ஏற்படுத்திக்கொள்கிறான். அப்போது வருகிறது இந்த பாடல்.

மிகவும் classic ஆன பத்து இளையராஜா பாடல்களில் இதை நிச்சயம் சேர்க்கலாம். ஒரு ரம்மியமான tone பாடல் முழுதும் வழியும். ஹீரா மேல் ஒரு பெரும் காதலையே நான்கைந்து நிமிடங்களில் visuals உருவாக்கி விடும். சித்ரா - உன்னி கிருஷ்ணன் குரல்கள் வாயசைப்பில் சிறைபடாமல் சுதந்திரமாக திரிவதால் காட்சிகளில் வரும் சிற்பங்களூடும் - நீர் வீழ்ச்சிகளூடும் இசை அலைந்து, நனைந்து வரும்.

பாட்டில் நான் பெரிதும் ரசித்த விஷயம் ஹீரா தான்! இத்தனை gracious - charming ஆக பாலு சார் வேறு எந்த நடிகையையாவது காட்டியுள்ளாரா என்று தெரியவில்லை! அந்த கதாபாத்திரம் ஈடுபடுவது ஒரு தர்மத்திற்கு முறையான செயல் என்பதை தாண்டி அவரிடம் ஒரு கண்ணியத்தன்மையும், மரியாதையும் நமக்கு ஏற்படும். அவரது cotton sarees, brownish hair-style எல்லாமே அவரது கதாபாத்திரத்தை அத்தனை உயிர்ப்புடன் present செய்யும்.

P.S :: இந்த படமும், பதிவும் இந்த பாட்டில் ஓர் exceptionally beautiful தேவதையாக வலம் வரும் ஹீராவை சமீபத்தில் எனக்கு நினைவூட்டிய Karthickeyan அண்ணாவுக்கு dedicated..

ஓ வசந்த ராஜா..!

இன்று காலை ஏதோ ஒரு சேனலில் 'ஓ வசந்த ராஜா..' பாடலை பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போதே சில பாடல்கள் அதன் வித்தியாசமான செய்நேர்த்திக்காக மனதில் பதிந்துவிடுகிறது. அப்படி வசீகரித்த ஒரு பாடல் இது. பாடலின் தொடக்கத்தில் நாயகன் மேல் சட்டையின்றி கடற்கரையில் படுத்திருப்பதும், அவனது முகமும் சட் சட்டென்று இசைக்கேற்ப காட்டப்படும். அப்படி ஒரு தொடக்கத்தை நான் அதுவரையோ, அதன் பின்னரோ வேறெந்த பாடலிலுமே கண்டதில்லை! அதீத காதல், seduction மற்றும் ecstasy - இதன் மையப்புள்ளி ஒன்றில் இந்த பாடல் இருக்கும். பல நாட்கள் கழித்தே இந்த பாடலை இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா என்றறிந்தேன்!

படத்தில் இந்த பாடல் ஒரு மிக அழகான, குறும்பான, பாலுமகேந்திராத்தனமான தருணத்தில் இடம்பெறும். பாலு சார் படத்தில் அநேகமாக வரும் 'யோவ்.. ரொம்ப தான் பண்ணுறியே..' 'ஏன்யா..' என்ற செல்லமான காதல் வசனங்களே! பார்த்தவுடன் புன்னகைக்க வைப்பவை! அதன் நீட்சியாக நாயகன் அவளை தன் காதலி என அங்கீகரித்த ஒரு கணத்திற்கு பிறகு பாடல் இடம்பெறும்!

பாட்டின் இறுதி சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் இலை மறை காய் கவிதையமைப்புக்காக.. ஜானகியின் பிரத்யேகமான குரலுக்காக.. சரணத்தின் கடைசி வரியில் (தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 'பால் அபிஷேகம்..' என்ற வார்த்தை வரும் இடத்தில்..) இளையராஜா க்ஷண நேரத்தில் நடத்திடும் ஜாலத்திற்காக..

"ஆராதனை நேரம்..
ஆலாபனை ராகம்..
அலைபாயுதே தாகம்..
அனல் ஆகுதே மோகம்!
என் மேகமே வா வா!
இதழ் நீரைத் தூவு!
மன்மத கோயிலில் பால் அபிஷேகம்..
"

தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் கனவுலகில் அவன் தன் காதலியை ரசிப்பதும், ஆராதிப்பதும், வர்ணிப்பதும் சலிக்க சலிக்க காட்டப்பட்டுள்ளது. அவன் காண விரும்பும் உடையில் தான் நாயகி நமக்கு காட்டப்படுவாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு பெரும் புரட்சி. Path-breaking என்றே சொல்வேன். பாட்டு நாயகியின் கோணத்தில் நகர்கிறது. அவளது கனவில் அவள் காண விரும்பும் அவளது காதலன் பிம்பங்கள் நிறைந்து இயங்கும். அந்த பாடல் நெடுகிலும் பானுசந்தர் மேல் சட்டையின்றி, shorts அணிந்தோ - pant அணிந்தோ இருப்பார். பானுசந்தரை பார்க்கும்போதெல்லாம் அர்ச்சனா ஒரு காமத்தில் நனைத்த வெட்கத்தை முகத்தில் அணிந்திருப்பார். 

                                                                                         

உதாரணத்திற்கு கோவிலில் மேல் சட்டையின்றி - வேஷ்டி அணிந்து பானுசந்தர் நிற்பது போல் ஒரு காட்சி வரும். அப்போது பூஜை தட்டொன்றுடன் சந்நிதியில் இருந்து வெளிவரும் அர்ச்சனா அத்தனை வெட்கத்தை தன் கண்களிலும், சிரிப்பிலும் காட்டி தலையை குனிந்து கொள்வார். இது தான் பாட்டின் ஆதார கருவே. ஒரு ஆணால் தன காதலையோ - காமத்தையோ எளிதே வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய சமூகத்தில் அதிகம் பேசப்படாத, சொல்லபடாத பெண்ணின் காதலை - காமத்தை அவளது மனமாகவே சிந்தித்து காட்டியது பாலு சார் மட்டும் தான்!

http://www.youtube.com/watch?v=SYXN_BBvVac

Thursday 13 February 2014

அழியாத கோணங்கள்..

"நீ இல்லாமல் எது நிம்மதி..
நீ தான் என்றும் என் சந்நிதி.. "

இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ரவீண் பிரசன்னாவும் நானும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேசும் பொழுது எங்களின் அத்தனை ஆதர்ச இயக்குநர்களின் மேலும் ஏதேனும் ஒரு விதத்தில் எங்களுக்கு பிடிக்காத, அல்ல விரும்பாத விஷயங்கள் இருந்தன. மணிரத்னம் உட்பட.

நாங்கள் இருவரும் கருத்தொன்றி குறை சொல்ல முடியாத இயக்குநராக சிலாகித்தது பாலு சார் தான்! 

                                            


அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு முழுமையான கலைஞனால் வாழக்கூடிய வாழ்க்கை. அந்த பெயரே அந்த கலைஞனுக்காக செய்யப்பட்டதே! எத்தனை விருதுகள் - வீழ்ச்சிகள் - சரிவுகள் - சாபங்கள் பெற்ற பொழுதிலும் கலையும் காமிராவும் இவர் சொன்ன சொல்லுக்கு மறு சொல் சொல்லாமல் ஆடின!

எந்த தலைமுறைக்கும் சினிமா என்பது பொழுதுபோக்கு என்றே அறிமுகமாகிறது. பின் பாலு சார் போன்றவர்கள் அதன் மற்றொரு முடிவெளி இல்லாத வனாந்தரத்தை காட்டுகின்றனர். பாலு சாரின் படைப்புகள் ஆத்மார்த்தமானவையாக இருந்ததற்கு காரணமே அவரது வாழ்க்கை தானோ என்று நினைத்துக்கொள்வேன். அத்தனை நுட்பமான வாழ்வியல். சினிமாவை மட்டுமே சுவாசித்த வாழ்க்கை.

படைப்பின் அதீதமான தருணம் ஒரு ஆகச்சிறந்த படைப்பை உருவாக்குவது. அதனினும் உயர்ந்தது படைப்பாளிகளை படைப்பது. "ராமன் அப்துல்லா" எடுத்து ஐந்து வருடங்கள் கழித்து "ஜுலி கணபதி". "அது ஒரு கனாக்காலம்" பின் எட்டு வருடங்கள் கழித்து "தலைமுறைகள்"! வணிகம் கழுத்தில் கத்தி வைத்த நேரங்களில் எல்லாம் சினிமாவிற்கு வெற்றிமாறனையும், பாலாவையும், சசிகுமாரையும், ராமையும் பெற்று கொடுத்திருக்கிறார்.

அழகியலை அறிமுகம் செய்ததே பாலு சார் தான். ஒரு டூயட் என்பது நடனம் என்ற மரபை வலிந்து உடைத்தவர். புல்லில் அமர்ந்து கிடார் வாசிக்கும் பிரதாப் போத்தனை காதல் பொங்க ஷோபா பார்ப்பதில் தெரிந்த காதலும், அர்ச்சனாவின் கருவிழியும், மௌனிகாவின் சிரிப்பும், பிரியாமணியின் பார்வையும் வேறெந்த நேரத்திலும் எந்த இயக்குநராலும் பெற முடியாதவை.

சில நாட்களுக்கு முன் தலைமுறைகள் பற்றி எழுதியிருந்த போது 'கொட்டும் மழையில் தன் அத்தனை கட்டுப்பாட்டையும் மறந்த அந்த தாத்தா நனைவது.. மரணத்திற்கு முந்தைய கணங்கள் என்பதால் அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.. அவரது முழுவாழ்வையும் பேரனுடன் நனைத்த அந்த மழை, சலவை செய்தது போல் இருந்தது.' என்று எழுதியிருந்தேன். தொப்பி இல்லாமல் பார்த்தறியாத பாலு சார் தன் முகமாக நடித்ததும் அந்த காட்சி இறுதியில் "தாத்தாவ மறந்துடாத.. தமிழையும் மறந்துடாத" என்பதும்.. அந்த படம் எதை நினைத்து பாலு சார் எடுத்திருப்பார் என்று யோசிக்கிறேன்.

சற்று முன்னம் ஒருவரின் இடுகையில் சொன்னது போல் 'பாலு சாரை பொறுத்தவரை RIP என்பது Rest in Photography என்றே பொருள் கொடுக்கிறது!

மௌனம் என்பதன் உருவம் பாலுமகேந்திரா வைக்கும் கோணத்தில் கட்டாயம் இருக்கும். சொக்கலிங்க பாகவதரோ சுப்பிரமணியோ.. இவரது காமிரா முன் காட்டிய மௌனம் அழியவே அழியாதவை.

சினிமாவின் மௌனமாகவே அவரது இழப்பு இருக்கப்போகிறது.

Sunday 2 February 2014

நுண்ணரசியல் :) :)

மணிரத்னம் படங்களின் நடுநிலைமை பற்றி ஒரு விவாதத்தை இப்போது தான் வாசித்தேன். நுண்ணரசியல் - ஆழமான புரிதல் என்று நீண்டு அவருக்கு எப்போதுமே தெளிவான அரசியல் பார்வை இல்லை என்று முடிந்திருந்தது.

ஏற்கனவே இதை மையப்படுத்தி காட்சிப்பிழையில் யமுனா ராஜேந்திரன் அத்தனை மணிரத்னம் படங்களையும், அந்தந்த கதாபாத்திரத்தின் கதைகளாக பார்க்காமல் அரசியல் ரீதியாக அணுகுகிறேன் என்று Post Mortem செய்து கொண்டிருக்கிறார்!

விட்டால் 'அலைபாயுதே'யை கூட "தாம்பரம் ரயில் ஊழியர்களின் வாழ்வியலை மணி புரிந்து கொள்ளவே இல்லை!" என்று சொல்வார்களோனு யோசிக்கிறேன்!

Saturday 1 February 2014

வாழிய வாழியவே!

தமிழ்நாட்டில்.. குறிப்பாக Engineering படிக்கும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களில் பெரும்பாலானவை ஒரே வகை.. ஒரே கதை தான். ஒரு மாணவன் இருப்பான். (கண்டிப்பாக Mechanical Engineering தான் படித்து கொண்டிருப்பான்..)

அவனுக்கு நாலு நண்பர்கள். ஆங்காங்கே Mechனா Gethuடா போன்ற வசனங்கள் தெறிக்க திடீரென அந்த நாயக மாணவனுக்கு ஒரு காதல் வரும். காதல் என்றால் அப்படி ஒரு அமரக்காதல். "மச்சி.. அது என் Figure மச்சி" காதல். நண்பர்கள் நாயகனால் திடீரென புறக்கணிக்கப்படுவார்கள்.

காதலர்கள் Cell phoneல் பேசிக்கொள்ளும் montageகளுடன், படம் எடுக்கப்பட்ட நேரத்தில் hit ஆன ஒரு Harris / Rahman பாடல் பின்னணியில் அடிக்கடி வரும்! நகைச்சுவைக்காக 'தென்பாண்டி சீமையிலே..' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். தல - தளபதி போன்ற இளைஞர்களின் முக்கியமான தேசிய பிரச்சனைகள் கூட அலசப்பட்டிருக்கும்.

படம் நெடுகே "சரக்கடிக்கலாமா?" என்ற கேள்வி தொக்கி நிற்கும். காதலில் தோல்வியுற்றோ - ஏமாற்றபட்டோ நட்பின் அருமையை உணர்ந்த நாயகனை சூழ்ந்த நண்பர்கள் - "இவளுங்கள நம்ப கூடாது மாமா!", "நாங்க இருக்கோம் மச்சி" என்று சொல்ல.. காவியம் இனிதே நிறைவுறும்!!

இந்த செவ்வியல் படைப்புகள் குறைந்தது 15 நிமிடங்களாவது நீடிக்கின்றன.

இதில் ஒன்றிரண்டு குறையலாம். இதற்கும் மேலே பல அற்புத தருணங்கள் சேரலாம்! அப்படி ஒரு உன்னத படைப்பை இன்று பார்த்தேன்!!

'இவ்வளவு தான் சினிமா!' என்ற மதிப்பீட்டில் படத்தை இயக்குவது இருக்கட்டும். பெண்களை பற்றியும், காதலை பற்றியும் இளைஞர்கள் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதெல்லாம் நினைத்தால் புல்லரித்தது!


— feeling "Lifela romba periya aala varuveengadaa.." moment.

KADAL Memories!!!


One year since KADAL got released!

What a journey it was!

                          

From the very first single I heard through MTV coke studio performance of Nenjukkulla by Shakthisree Gopalan & A.R. Rahman, it was like a thrilling ride. That 5 seconds teaser when nothing but a young man riding into a deep sea with Elay Keechan humming at background thrilled me so much. Can't express those exciting moments when I heard Adiye for the 1st time. Can't remember how many times I would have listened to Anbin vaasale! (And the happiest thing about the album is : Won a original soundtrack CD, my 1st ever original CD in Sony Music India's Kadal contest!)

And then the trailer came. I was literally flying when Mani sir came out of his comfort zone! "Yaarula andha dhevadha? Naan maatha mudiyadha thommaya mathunadhu?", "Enakku pidichirukku!" Alll that drove me crazy! And that gave me a spark to read Jeyamohan! (And I was really blessed to spend a day with the writer later, exploring some very interesting things in the making of the film.)

Was counting every second & minute to reach the Feb 1, 2013. It was a pleasure to see Gautham's look, new stills, Thulasi Nair's face.. (Finally!!!) She did impressed me with her performance in the film. Truly an Angelic performance! (Though her character was not that well developed as Mani himself said "I'm happy with most of the film, except for the Bea track, which I wasn't able to crack correctly.")

And yes! I do agree. I was disappointed by the 1st watch. With that complicated theme & everything conveyed through symbols & dialogues.. (And that's where I made a point that not to watch a film like this in a pathetic theater atmosphere or with impatient audience who utters 'Ssss...' for every 2 minutes..) And as Baradwaj Rangan says, the most interesting aspect of Kadal – at least for longtime followers of this director, a self-confessed atheist – is the explicit religiosity. And then with repeated watchings.. Man! What to say! Kadal extended like a Kadal.

This film gave me a chance to meet some very interesting people in Facebook. Have spent hours discussing with them about various brilliant moments in the film from camera angles to frames.. from a minute dialogue that gets faded by a BG score (like Bea asking Father Sam, "Ungalukku dhaan porandhappo thanga thottillaam senjaangalaame. Apdiyaa?") to sub-textual elements embedded throughout the film (like the heavenly light that falls on Celina when she betrays Sam for Bergmans) Together we discovered many things.

Thomas, Beatrice, Father Sam, Bergmans, Celina. Each character fascinated me in its own way. Despite the final version of Kadal being differed heavily from what Mani thought to bring on screen.. [Wish he release the Director's cut atleast for this film!]

Should thank Baradwaj Rangan for that detailed coast analysis on Kadal. (Even we just can't thank you enough for Conversations with Mani Ratnam itself. Thats a boon to us actually! What else can possibly be the biggest gift to fellow ManiRatnam fans like me?)

http://baradwajrangan.wordpress.com/2013/02/03/kadal-coast-analysis/

That analysis helped me to dive even more deeply! "But really, Mani Ratnam and God. Who would’ve thought?" That wonder made us to dissect Kadal keenly! That's the only review where I got to know how many things have been gone unnoticed in this epic attempt of a man who still searching for something! [Wannabe reviewers all over there can learn how a review for complex film should be from that!]

I should confess that I have spent days in arguing with people who said "Mani's period is over. Kadal is such a dumb film I've ever seen". Have seen hell lot of "Epdiyum padam flop dhaane?" people (Did you produce his films?) And then I got the most valuable lesson from this film, "Better stay away from someone who can just speak but can't listen!"

Though the film had its own flaws, I can bet you that if not Mani no one.. just no one.. will take such a leap step!

Thank you Mani Ratnam sir! _/\_

Thanks for this riveting piece of work! If someone asked me in my future.. about films that fuelled my passion Kadal will be there in 1st place!

Even when someone asks me 5 best films of Ratnam, I can happily add Kadal for elevating both the maker & viewer to a different level.
feeling grateful to Mani Sir