Tuesday 31 December 2013

Jumbalakka Jumbalakka

Fun is listening to 'Jumbalakka Jumbalakka' song! A.R. Rahman of 90's is still unbeatable. See how youthfulness & joy overflow in the voice rendition & Vairamuthu's lyrics.

Dedicating this particular portion of song to all those guys who have plans to propose their crush on 2014! Learn - Plan & Rock

"பேசிப் பேசி அர்த்தம் என்ன?
பேசாம முன்னேறணும்..

காதல் எல்லாம் மேகம் போல..
தன்னாலே உண்டாகணும்..

எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க!
I love you சொன்னாலும் தள்ளி நின்னே சொல்லுங்க..

மெல்லப்பேசு! பெண்மை உன்னை வெறுக்காது.
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது.

பெண் உள்ளம் ஒரு மூங்கில் காடு!
தீக்குச்சி ஒன்றை போட்டுப்பாரு!

அவள் பாதத்தில் தலை வைத்து..
அண்ணாந்து முகம் பார்த்து..
Love பிச்சை கேட்டுப்பாரு!"

Monday 30 December 2013

Films which disappointed me - 2013

Finally sharing a set of films that disappointed me heavily.

Viswaroopam
Paradesi

Moondru Per Moondru Kadhal

Irandam Ulagam

Annakodi

Mariyaan

David
(Tamil version)

P.S :: Completely personal opinion. May or may not coincide with the general responses of the films.

Favourite Lyrics - 2013

And here goes certain portions of lyrics that came out in 2013 which stunned me or wondered me with their incredible comparisons, beautiful arrangements & synchronization with the tune or sometimes with their simplicity!

Kadal

(NENJUKKULLA : Vairamuthu)

காச நோய்க்காரிகளும்,
கண்ணுறங்கும் வேளையில..
ஆச நோய் வந்த மக..
அர நிமிசம் தூங்கலையே!

(ADIYE : Madhan Karky)

மீனத் தூக்கி றெக்க வரஞ்ச!
வானம் மேல நீ வீசி எறிஞ்ச!

(KEECHAN : Madhan Karky)

ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

 
Viswaroopam (UNNAI KAANADHA : Kamal Haasan)

எதிர்பாராமலே அவன்,
பின்னிருந்து வந்து எனை..
பம்பரமாய் சுழற்றி விட்டு..
உலகுண்ட பெருவாயன்,
எந்தன் வாயோடு வாய் பதித்தான்!

Paradesi (O SENKAADE : Vairamuthu)

உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே!
வயிறோடு வாழ்வது தானே பெரும் துன்பமே!

Kuttipuli (ARUVAAKAARAN : Vairamuthu)

தங்கம் நான்..
என்ன தேய்க்க வா!
தாலியில்..
கட்டி மேய்க்க வா!

Annakodi (NARIGA URANGA : Vairamuthu)

காட முட்ட கண்ணழகி!
மாடு முட்டும் மாரழகி!
பாதகத்தி செருப்ப வச்சு..
பரிசம் போட வந்துருக்கேன்.

Thanga Meenkal (YAARUKKUM THOZHAN : Na. Muthukumar)

செல்ல பொம்மை!
வெல்லக்கட்டி!
என்னைக் காக்கும் தெய்வமே!

Varuthapadatha Valibar Sangam

(ENNADA ENNADA - Yugabharathi)

நான் ஓயாத வாயாடி..
பேசாம போனேன்.
பொட்டு செடி நான்..
மொட்டு வெடிச்சேன்.

(PAAKADHA PAAKADHA - Yugabharathi)

செக்க செவந்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற?
என்ன இருக்குது என்கிட்டனு
என்ன முழுங்க நீ பாக்குற

Pandiyanadu (YELE YELE MARUDHU : Vairamuthu)

சிறுத்த இடை போல என்னுசுரு வாடுது..
பெருத்த தனம் போல பிரியமோ கூடுது!

Irandam Ulagam

(EN KADHAL THEE : Vairamuthu)

கண்டார் மயங்கும்.. வண்டார் மலரே!
நின்றோர் மொழி சொல்லடி!
உன் பின்னே பிறந்து, முன்னே வளர்ந்தது..
என்னே செழுமையடி!

(RAAKOZHI : Vairamuthu)

அந்த இளையகன்னிக்கு கூந்தல் வாரவே..
எலும்பில் சீப்பெடுப்பேன்!

Favourite songs - 2013

Sharing a list of my fav. songs from 2013 (having good lyrics) that I repeatedly heard!

TAMIL

Nenjukkulla, Adiye, Anbin Vaasale - Kadal
O sengaade, Senneer dhaana? - Paradesi
Unnai kaanadha - Viswaroopam
Kanna kanna - Vathikuchi
Boomi enna suthudhe - Ethir Neechal
Aaha kadhal - Moondru Per Moondru Kadhal
Aruvaakaaran - Kuttipuli
Nariga uranga - Annakodi
Enga pona raasa - Maryan
Thappu thanda - Aadhalal Kadhal Seiveer
Yaarukkum thozhan - Thanga Meenkal
Ennada ennada, Paakadha paakadha - Varuthapadatha Valibar Sangam
Prayer song - Idharkuthane Aasaipattai Balakumara
Unnale - Raja Rani
En fuse-um pochu - Arrambam
Ailasa, Oh penne penne - Vanakkam Chennai
Yele yele marudhu, Fy fy fy - Pandiya Nadu
En kadhal thee, Raakozhi - Irandam Ulagam
Nenjankuzhi - Naveena Saraswathi Sabatham

HINDI

Sunn raha hai (Shreya's version) - Aashiqui 2
Yun hi re - David 
Naham janami - Ship Of Theseus
Manmarziyan - Lootera

MALAYALAM

Kando kando, Vazhivakkil, Kandu rendu - Annayum Rasoolum
Vaathil melle - Neram
Yennundodi, Katte katte - Celluloid

FAVOURITE FILMS - 2013


                                

Listing my favourite & the works that mattered to me among the films I've watched in 2013.

TAMIL ::

Kadal
Thalaimuraigal
Onaayum Aattukkuttiyum
Ethirneechal
Neram
Aadhalal Kadhal Seiveer
Idharkuthane Aasaipattai Balakumara
Varuthapadatha Valibar Sangam

HINDI ::

Ship Of Theseus
David

MALAYALAM ::

Annayum Rasoolum

KANNADA ::

Lucia

Sunday 13 October 2013

எழுத்தாளர்களும் - தமிழ் சினிமாவும்

மணிரத்னம் - சுஜாதா (அல்லது) ஷங்கர் - சுஜாதா : இதற்கு பிறகு எழுத்தாளர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லையே? ஏன்?

Steephan Sansigan :: என்னை பொறுத்தவரையில் சுஜாதா என்ற ஒரு எழுத்தாளனை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை...

Kp Tharsigan :: ஜெயமோகனுக்கு இன்னும் நல்ல ஒரு கூட்டணி அமையவில்லை  என்று நினைக்கிறேன்.

Suhansid Srikanth :: ஜெயமோகன் செய்வதெல்லாம் சீரியஸ் ரகமாக உள்ளதே! சுஜாதா கொடுத்த அந்த ரசனை வரவில்லை.

Omar Sheriff :: மன்னிக்கவும் தமிழ் சினிமா - எழுத்தாளர்கள் என்று ஒரு கூட்டணி ஒருபோதும் இருந்ததில்லை. சுஜாதாவை "உபயோகப்படுத்திக் கொண்டனர்" தமக்கேற்றவாறு.. அதுதான் உண்மை.

Suhansid Srikanth :: கேரளாவில் உள்ளதில் 10% கூட நாம் எழுத்தாளர்களுடன் சேர்ந்து முயலவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சுஜாதா இறந்த பின் இருந்ததும் குறைந்துவிட்டதோ என்பதே என் கேள்வி! சுஜாதா ஒப்புக்கொண்ட படங்களில் அவரது பணி சிறப்பாகவே இருந்தது. உயிரே, இந்தியன், அந்நியன், கன்னத்தில் முத்தமிட்டால். எத்தனை ரசனையான படைப்புகள்!! ஒரு எழுத்தாளன் சினிமாவில் எந்த அளவிற்கு தனது ஆளுமையை, நடையை கதாபாத்திரங்களில் கொண்டுவரலாம் என்பதற்கு உதாரணங்கள் (சிவாஜி போன்ற சில படங்கள் தவிர்த்து..)

Jay Kumar :: Wat abt K. V. Anand + Subha ???

Suhansid Srikanth
:: சுபா? அவர் செய்வது படம்! பரபரவென ஓடும் காட்சிகளின் தொகுப்பு. காதலோ, உணர்வுகளோ எதுவும் மனதில் நிற்காமல் சட் சட்டென்று மாறும் ஒரு வணிக கலவையை உருவாக்கி தருகிறார். அவ்வளவே. அது சினிமா அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

Omar Sheriff
:: சுஜாதாவின் திறமையை வசனம் எழுதுவதற்காக வேண்டி மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டனர். மற்றபடி திரைக்கதை, அவரது நாவல் (அ) சிறுகதையை மையமாக வைத்து எடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் சுஜாதா வெறும் வசனகர்த்தா மட்டுமே. (சுஜாதவின் எழுத்து மீது எனக்கு மதிப்பு உண்டு ஆனால் அவரது எழுத்தரசியல் மீது காட்டமான விமர்சனங்கள் உண்டு)

Steephan Sansigan
:: //சுஜாதாவின் திறமையை வசனம் எழுதுவதற்காக வேண்டி மட்டுமே உபயோகப்படுத்திக் கொண்டனர்// இது தான் மிகப்பொருத்தமான கூற்று

Steephan Sansigan
:: "கன்னத்தில் முத்தமிட்டால்" இது ஒரு படைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு இனத்தின் புரட்சிகள் மீதான செல்வாக்கை தனது வணிக நோக்கத்திற்காக பயன்படுத்திய மிக மோசமான் ஒரு செயல்...

Suhansid Srikanth
:: அந்த படம் எந்த இனத்திற்கும் சார்பாக எடுத்த படம் அல்ல. ஒன்பது வயது சிறுமி அமுதா தன் தாயை தேடி செல்லும் தேடலில், அவள் பார்வையில் நிகழும் ஒரு யுத்தத்தின் கதை.. அதில் நீங்கள் அரசியலை தேடினால் படத்தை ரசித்திருக்க முடியாது.

Steephan Sansigan
:: இது மிகவும் வேதனைக்கு உரிய பதில். சினிமா எனும் ஊடகம் ஒரு வாழ்க்கை கண்ணாடி தான். எங்கள் போராட்டம் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் இது போன்ற கலைகள் ஊடாக தவறான பரப்புரைகள் மேற்க்கொள்வது ஒரு படைப்பிற்கோ, நல்ல படைப்பாளிக்கோ அழகில்லை...
 
Omar Sheriff
:: அரசியலை தேட முடியாதா? நல்ல கேள்வி. தமிழ் சினிமாவில் ஊடாடும் அரசியலை தவிர்த்து விட்டால் எல்லாமே சிறந்த படங்கள்தான். சாதிய, இந்துத்துவ அரசியல் கூறுகளை புறந்தள்ளிவிட்டு பார்ப்பது எனக்கு சாத்தியமில்லாத செயல். இலங்கை பிரச்சினை பற்றிய எந்தவித புரிதலுமின்றி எடுக்கப்பட்ட படம் கன்னத்தில் முத்தமிட்டால்... அவ்வாறு மகள் - தாய் தேடல் மட்டும்தான் முக்கியமென்றால் வேறு கதைக்களனை நாடியிருக்கலாமே.

Suhansid Srikanth
:: அரசியலை தேடாதீர்கள் என்று சொல்லவில்லை. அரசியலை மட்டுமே தேடினால் படத்தின் கதை பேசும் உணர்வுகளை உள்வாங்க முடியாது என்றேன். ஒரு குழந்தையின் பார்வையில் செல்லும் கதையில், நீங்கள் உங்கள் மனம் அறிந்த அரசியலை பொருத்தி பார்ப்பது சரியல்ல என்றேன்.
 
Suhansid Srikanth
:: "தேயிலை தொழிலாளிகள் பட்ட கஷ்டத்தில் காசு பார்ப்பதா? பிச்சைக்காரர்கள் படும் அவலத்தில் காசு பார்ப்பதா?" என்று பாலா படங்களை பார்த்து இதே கேள்வியை எழுப்புவீர்களா? அவர் செய்வது தான் ஏழ்மையை பிரதானபடுத்தி வணிகம் செய்வது!! மணிரத்னம் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் செய்தது அல்ல..

Steephan Sansigan
:: பாலா ஒரு போதும் யதார்த்த சூழல் மீது தனது சுய லாப நோக்க எண்ணங்களை புகுத்தவில்லை. அவருடைய படைப்புக்கள் எவற்றிலும் யதார்த்த சூழல் மாற்றப்படுவதில்லை

Suhansid Srikanth
:: பாலா படங்களில் வணிக நோக்கம் இல்லையா? ஏழ்மையை சுற்றி நகரும் கதை எல்லாம் நல்ல சினிமா ஆவதில்லை. கன்னத்தில் முத்தமிட்டாலின் சினிமா மொழி உலகிற்கு பொதுவானது. பரதேசியில் என்ன நிகழ்ந்தது? கூத்து - கும்மாளம் எல்லாம் முடிந்து கதைக்குள் நுழைவதற்கே 1st half முழுவதும் எடுத்துக்கொண்டார்!

Suhansid Srikanth
:: ஒரு குழந்தையின் பார்வையில் யுத்தம் எப்படி தெரியுமோ அதுவே படத்தில் காட்டப்பட்டது.. அந்த படத்தின் களம் தான் யுத்தம்.. கதை ஒரு அம்மாவை தேடி செல்லும் சிறுமியை பற்றி.. அதில் ஏன் அரசியல் கலக்க வேண்டும்? இதே கதை அந்த தந்தை (எழுத்தாளர் திருசெல்வன்) பார்வையில் சொல்லப்பட்டிருந்து, அதில் அரசியல் பார்வை தெளிவாக இல்லை என்று நீங்கள் வாதாடினால் நான் ஏற்றுக்கொள்வேன். ஒரு ஒன்பது வயது சிறுமியின் கண்ணோட்டத்தில் அவள் காணும் வெடிகுண்டு புகையும், சிதறி விழும் மனித உடலும் தான் மிகப்பெரிய வன்முறை! அவள் மனதை உலுக்க அதுவே போதுமானது!

Steephan Sansigan
:: சகோ! இப்பொழுது எங்கள் விவாதம் ஒரு படைப்பின் மீது மட்டுமே.. அந்த படைப்பை தாங்கி நிற்கும் எந்த பாத்திரத்தையும் பற்றியதல்ல...
 
Suhansid Srikanth
:: படைப்பின் கதை சொல்லும் விதம் பாத்திரங்களை பொறுத்ததே.. வெடிகுண்டை நானோ, நீங்களோ பார்க்கும் கோணம் வேறு. ஒரு குழந்தை பார்க்கும் கோணம் வேறு.

Steephan Sansigan
:: அதைப்பற்றி எனது விவாதம் இல்லை. மிகச்சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படைப்பில் வரும் அத்தனை பாத்திரங்கள் - சூழல்களின் பொறுப்பை படைப்பாளியே ஏற்க வேண்டும். எனது விவாதம் இப்பொழுது படைப்பாளியை பற்றியதே. கருத்துக்கள் மீதான சரியான புரிதல் வேண்டும். எங்கள் போராட்டம் பற்றிய உண்மை நிலை என்ன? உதாரணத்துக்கு சொல்கிறேன். இந்த படத்தில் காட்டப்பட்ட குழந்தை போராளிகள் உங்கள் காட்சிக்காக வடிவமைத்த ஒரு விஷயம். எங்கள் போராட்டம் மீது எப்படிப்பட்ட ஒரு கறையை பூசியது உங்களுக்கு தெரியுமா?

Suhansid Srikanth
:: அந்த காட்சி குழந்தைகளும் இந்த யுத்தத்தால் தீவிரவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை உணரவைக்கவே! அமுதா தன் சக வயது பெண்கள் வேறொரு தளத்தில் இருப்பதை கண்டு மிரட்சி கொள்வதை காட்டுவதற்கான கருவி தான் அக்காட்சி!
  
Steephan Sansigan
:: அது தான் ஏன்? என்கிறேன். அந்த ஒரு காட்சியில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த படம் வந்த பிறகு எத்தனை சிறுவர் அமைப்புகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தன தெரியுமா? ( குறிப்பு - 21 வயதிற்கு கீழ்ப்பட்ட எவரும் யுத்தத்தில் பங்கு பெறவோ அல்லது பலவந்தமாக இணைப்பதோ சர்வதேச யுத்த விதிகளுக்கு முரணானது )

Suhansid Srikanth :: அப்படி என்றால் இலங்கையில் குழந்தைகள் யாருமே யுத்தத்திற்கு தயார் செய்யப்படவில்லையா?

Steephan Sansigan :: //அப்படி என்றால் இலங்கையில் குழந்தைகள் யாருமே யுத்தத்திற்கு தயார் செய்யப்படவில்லையா?// மன்னிக்கவும் இதற்க்கு மேல் தொடர எனக்கு விருப்பம் இல்லை..

Suhansid Srikanth :: "அந்த ஒரு காட்சியில் எந்த வித உண்மையும் இல்லை." என்று நீங்கள் சொன்னீர்கள். அதற்கான கேள்வியே நான் கேட்டேன். அதில் என்ன தவறு? அந்த காட்சியின் அமைப்பு பிழை என்றால் - குழந்தைகள் அங்கே பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை என்று சொல்வது போல் உள்ளது. அதைத்தான் கேட்டேன்.. தொடர விரும்பவில்லை என்ற பதில் எந்த நோக்கத்தில் வந்தது என்று புரியவில்லை.
 
Maheshkumar Janakiraman
:: Please read Baradwaj Rangan's "Conversation with ManiRatnam" : He answered all questions posed above, Kannathil muthamittal is never meant to show about tigers, Its about the girl and her views only .. Also If he had shown what is really happening in Srilanka, movie would have never got released, which is unfortunate, and thats the way politics is here

Suhansid Srikanth :: Conversations with ManiRatnam புத்தகத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் படித்த யாரும் மணிரத்னம் மீது அபத்த விமர்சனங்களை சுமத்த மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

Maheshkumar Janakiraman
:: Very good book Aspiring film makers must read.. He tells so many things about cinema and techniques ....

Omar Sheriff
:: சரி கடைசியா ஒரு விஷயம். அது குழந்தையின் பார்வையாகவே இருக்கட்டும்... அந்த நடிப்பு ஒரு குழந்தையுடைய இயல்பான நடிப்பாகவா இருக்கு? இல்லை! 25 வயது குழந்தையுடையதாக இருக்கு.

Suhansid Srikanth :: சினிமா என்பது டாகுமெண்டரி அல்லவே! மிகைப்படுத்தல் இல்லாவிட்டால் அது சினிமாவே இல்லையே!

Sreejith Bhaskaran
:: "CHILDREN OF HEAVEN"ல   ஏழு வயது குழந்தை அந்த பையனின் தங்கைக்கு ஷூ வாங்கித்தரும் அளவிற்கு அறிவோட இருக்குது என்றால், ஒரு 9 வயது சிறுமி கன்னத்தில் முத்தமிட்டாலில் தன அம்மாவை தேடி போற நடிப்பு இயல்பு தான்..

Saran Kumar :: எனக்கு தெரிந்து சுஜாதா திரைமொழி தெரிந்தவர், அதனால் தான் அவரால் தமிழ் சினிமாவில் மரியாதையுடன் இருக்க முடிந்தது. அவர் எந்த நேரத்திலும் இயக்குநரை  தான் முந்தி செல்ல வேண்டும் என்று நினைப்பத்தில்லை, ஜெயமோகனிடம் இந்த பக்குவம் இருப்பதாக தெரியவில்லை. எஸ்.ரா விடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் .

Kaarthik Mani :: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நடை எழுத்துழகில் மிகவும் பிரபலம். வாசிப்பதற்கு மனதில் ஆழமாக பதியும் மற்றும் தண்ணீர் போன்ற நடை. ஆனால் இவரை யாரும் சரிவர பயன்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. இவரை 'சண்டக்கோழி'  படத்தில் வசனம் எழுத வைத்தால் எழுத்தாளரின் இன்றைய நிலை ???

Omar Sheriff :: எஸ்.ராவையும் சுஜாதா போன்றே தமிழ் சினிமா "உபயோகப்படுத்திக்" கொள்கிறது. உலகத்தரமான படைப்பாளி எஸ்.ரா. தமிழ் சினிமா அவரை பயன்படுத்தும் விதத்தை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது.

Suhansid Srikanth :: எஸ்.ரா திரை மொழியில் என்ன சாதித்து விட்டார்? ஜெயமோகனின் அங்காடி தெரு, நான் கடவுள், 6 மெழுகுவர்த்திகள், நீர்ப்பறவை எல்லாம் தீவிர சினிமா மொழியில் இருந்ததே! (படத்தின் வெற்றி, தரம் பற்றி நான் பேசவில்லை. அதில் எழுத்தாளனின் பங்கை மட்டும் சொல்கிறேன்) : அவர் முழுக்கதை எழுதிய "கடல்", கதை, திரைக்கதை, வசனம் என மூன்றும் செய்த "ஒழிமுறி" பிரமாதமாகவே இருந்தது. எஸ்.ரா என்ன செய்தார்?

AravindhKumar Sachidanandam :: புது எழுத்தாளர்களை பத்திரிக்கைகளும், பதிப்பகங்களும் ஊக்குவிப்பதில்லை என்பது ஒரு காரணம். எழுத்தாளர்களின் தேவையை உணர்ந்த இயக்குநர்கள் இங்கே மிக மிக குறைவு என்பது இன்னொரு காரணம்.

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஜெயமோகனின் எழுத்தில் அவ்வளவு பிடிப்பில்லை எனக்கு.. ஆனால்.. எஸ் ரா.. மிகையில்லாத பதிவுகளுக்கு சொந்தக்காரர்.. எஸ் ராவின் கருத்தாளம் யதார்த்தம் ஊறியவை..

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: தவிர தமிழ் சினிமா நம் எழுத்துலகை முழுமையாய் உள் ஈர்க்க தயாரில்லை.. இடம்  கொடுக்காமல் எப்படி அவர்கள் தம் கைவண்ணத்தை காட்ட இயலும்? அவர்களின் படைப்புகளை திரைக்காவியம் ஆக்கினாலே விருதுகள் குவியும்! ஆனால் யார் தயாராக இருக்கிறீர்கள் ?

Suhansid Srikanth :: "கடல்" - ஜெயமோகன் முதலில் குறுநாவலாக எழுதிய கதையே! ஜெயமோகன் படைப்பில் பிடிப்பில்லை என்று சொல்லிவிட்டீர்கள்! இனி அவரைப்பற்றி பேச ஒன்றும் இல்லை. எனதளவில் அவரே தமிழின் தற்கால முதன்மை எழுத்தாளர்! எஸ்.ரா என்னை ஈர்த்ததில்லை. ஆன்மாவை தொடும் எழுத்து ஜெயமோகன் படைப்பது! அந்த உலகத்தில் பயணிக்க அவரது எழுத்துகளை, ஆளுமையை பயில வேண்டும்!

Suhansid Srikanth :: ஆமாம்.. ஒரு நாள் தெரியும்! அதற்கென்ன?

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஜெமோ.. ஒரு பெரிய விஷயத்தை கருவாக கொண்டுவிட்டு அது பற்றி மெல்லியதான, முரண்பாடான தீர்வை கொடுப்பார்.. ஆனால் எஸ்.ரா.. சமூகத்தில் புளுதி படிந்து கிடக்கும் மெல்லிய யதார்தத்தை பதிவு செய்து தெளிவான சிந்தனையை தூண்டும் முடிவை, கவித்துவமாய் கொடுக்கக்கூடியவர்.

Suhansid Srikanth :: ஜெயமோகனின் எழுத்து உங்கள் சிந்தனையை தூண்டவில்லை என்பது போல், எஸ்.ரா எழுத்து என்னை சிந்திக்க செய்வதில்லை. இது அவரவர் ரசனையை பொறுத்ததே!

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ஏற்கிறேன் ஜெ.மோவை ரசிக்கிறேன்.. கற்று கொள்கிறேன்.. சிந்திக்கிறேன்.. ஆனால் முடிவெடுக்க முடிவதில்லை.. ஆனால்.. எஸ்.ரா - எனக்கு புதுமைகளை கற்றுத்தருகிறார்.. # சிந்தனை பலவிதம் தான் #

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: மணிரத்னத்தை விமர்சிக்க கொஞ்சம் மேலான அறிவு வேணும் என்ற கருத்தில் நானும் உடன் படுகிறேன்.. ஆனால்.. சில இடங்களில் மணிரத்னத்தின் ஒரு வித சாய்வு அல்லது தடுமாற்றம் நம்மை புரியாத திசைகளில் தள்ளிவிடுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா?

Suhansid Srikanth :: நண்பரே! அவரது சாய்வோ, தடுமாற்றமோ என்னை ஒருபொழுதும் குழப்பியதில்லை. அவரது படங்களில் பிழைகள் நிகழும். ஒப்புக்கொள்கிறேன்! அதைத்தாண்டி ரசிப்பதற்கு ஆயிரம் விஷயங்களும் இருக்கும். நான் (ManiRatnam) படம் பார்க்கும் போது இங்குள்ள பலரை போல் nativity, geography, அரசியல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பூதக்கண்ணாடி வைத்து தேட மாட்டேன். அவை அவசியமே! ஆனால் ஒரு சில விழுக்காடுகள் முரண்படலாம். எத்தனையோ உலக படங்கள் அரசியல் பிழைகள் அல்ல பிறழ்வுகளுடன் வந்துள்ளன. அவை செவ்வியல் படைப்புகளாக மாறியும் உள்ளன. இதை ஒரு "cinematic liberty" என்றே நான் பார்க்கிறேன்.

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: ம்ம்.. ஒரு விதத்தில் என் சிந்தனைக்கு அவை காட்சி பிழைகளாக தெரியலாம்.. ஆயினும் என்னை பொறுத்த வரை மணிரத்னத்தின் படைப்புக்களை முழுமையான ஒரு படைப்பாக உணர முடிவதில்லை.. ஆனால் உணர முயற்சிப்பது உண்டு.. (உங்கள் கருத்தையும் மனம் கொள்கிறேன் )

Suhansid Srikanth :: அவர் செய்வதும் வணிக சினிமாவே! அதில் முடிந்தவரை ரசிகனை முட்டாளாக்காமல் செயல்படுகிறார். ஒரு சாதாரண வணிக இயக்குனர் எடுக்க தயங்கும் களங்களில் கதை உருவாக்குகிறார். அதுவே நான் ரசிக்கும் விஷயம்! அவர் வணிக சமரசம் இன்றி செய்த இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் கூட படைப்பாக தெரியவில்லையா?

யதார்தன் பிரம்மாஸ்திரன் :: கன்னத்தில் முத்தமிட்டால் கதை நடக்கும் நிலத்தில் நேரடியாக வசிப்பவன் என்ற ரீதியில் கன்னத்தில் முத்தமிட்டாலை விமர்சிக்கும் உரிமையுள்ளவன் ஆகிறேன்.. என்னை பொறுத்தவரை அந்த படம் ஒரு நல்ல முயற்சி. ஆனால் முழுவதுமாய் எங்கள் தேசத்து உண்மை பதிவு செய்யப்படவில்லை.. அனால் அதை வணிகம் என்று சொல்ல மாட்டேன்!

Tuesday 1 October 2013

மணிரத்னம் எதிர்ப்பின் பின்னணி என்ன?

மணிரத்னத்தின் ராவணன் - கடல் :: இந்த படங்களை "மொக்கை" - "முடியல.." என்ற ரீதியில் ஊரெல்லாம் கேலி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.. முன்பெல்லாம் அவர்களோடு விவாதிப்பேன்.. இப்போது அது எனக்கு சற்றே பழகி விட்டது..

ஆனால் திரைப்படக் காதலர்கள் என்ற குழுமத்தில் கூடவா ஒருவருக்கும் அந்த படங்கள் சொல்ல வந்தது புரியவில்லை.. நோலனை - டொரெண்டினொவை அங்குலம் அங்குலமாக அணுகும் மக்கள் சூழ் இடமான இங்கே யாருக்கும் இந்த முயற்சிகள் பிடிக்கவில்லையா?

ஒரே விதமான கதை சொல்லல் முறை - பாத்திர படைப்புகள் கொண்ட பாலாவை கொண்டாடி தினமும் இரண்டு பதிவாவது இங்கு பார்க்கிறேன்.. நேற்று ஒரு நீண்ட விவாதத்தில் "மணிரத்னம் ரோஜாவோடு தொலைந்து விட்டார்.. அவருக்கு ஆழமாக கதை சொல்ல தெரியாது.. பீல்டு அவுட்" என்ற ரீதியில் பலரது கமெண்ட் விழுந்தது.. மிஷ்கினை தூக்கிப்பிடிப்பவர்கள் கூட *மணிரத்னமா? அவர் தொண்ணூறுகளிலேயே தங்கி விட்டார் *என்று பேசினார்கள். மிகவும் நொந்து போன விஷயம்..

"மணிரத்னம், வைரமுத்து மாதிரி சாதிச்சவங்க இந்திய.. ஏன் ஆசிய சினிமால யாரு? அவங்கள நாம கொண்டாடுறோமா? கிடையாது. சத்தியமா கிடையாது" என்று செல்வராகவன் "இரண்டாம் உலகம்" இசை வெளியீட்டு விழாவில் காட்டமாக பேசியதன் மனவேதனை இப்போது புரிகிறது.

நமது கலாசாரத்தில் உலகத்தர சினிமாவை படைக்கும் ஒருவரை நிராகரித்து விட்டா நீங்கள் நோலனையும், இன்ன பிறரையும் கொண்டாடுகிறீர்கள்? புரியவே இல்லை!

Tuesday 18 June 2013

அம்பிகாபதி - "உன்னால் உன்னால்" - வைரமுத்து

என் வானம் விடிவது உன்னாலே..
என் வாசல் திறப்பது உன்னாலே..
என் வீதி நிறைவது உன்னாலே..
என் நிலவும், வெயிலும், மழையும், குளிரும்,
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. பேரன்பே..
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. பேரன்பே..

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கண்மணி பாசம் பேசும்..
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்..

என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்..
என் மௌனத்தில் குழைகின்ற வார்த்தை உன்னால்..
என் முகத்தில் முளைக்கின்ற முடியும் உன்னால்..
என்னை மோட்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்..
நான் முடிகின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்..

நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்..
கண்ணால்.. கண்ணால்.. கண்ணால்.. பேரன்பே,..
தீ போல் ஏனிங்கு சந்தித்தோம்?
சொல்லின்றி பாரம் கொண்டோம்..
துன்பம் கண்டோம்..
ஏன் காதல் சிந்தித்தோம்?
ஏன் வந்தாய் நீயாக?
பஞ்சோடு தீயாக..

உன்னால்..
நான் பாடும் பாடல் உன்னால்..
நான் பருகும் நீரும் உன்னால்..
என் நாளும் கோளும் உன்னால்..
என் நன்மை தீமை உன்னால்..
என் கண்ணில் கண்ணீர் உன்னால்..
அதில் காயும் புன்னகை உன்னால்..
என் உரிமை பொருளும் உன்னால்..
என் உயிரும் உன்னால்..

கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..
கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..கண்மணி..

நீ அமுத மழையா?
அமில மழையா?
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா?
எனது வலியறியும் உனது இதயம் கொடு..
ஏ.. வளர்பிறை அழகினை ஒருமுறை தொழ விடு..
என் பேர் சொல்லும் பேரன்பே வா..

உள்ளன்பை மறைக்கவொண்ணாது..
உன் போன்ற பெண்ணால்..
உன் பார்வை அருள் செய்ய வேண்டும்..
ஒளி ஊறும் கண்ணால்..

என் காதல் வேண்டாமென்று
ஓர் வார்த்தை சொன்னால்..
ஏழ்வண்ண வானவில் கூட
நிறம் மாறும் தன்னால்..

உன்னால்.. உன்னால்.. உன்னால்.. உன்னால்.. என் ஜென்மம்..
உன்னால்.. உன்னால்.. உன்னால்.. உன்னால்.. என் ஜென்மம்..

நான் தனிமையில் சிரிப்பதும் உன்னால்..
சில சபைகளில் அழுவதும் உன்னால்..
நான் பந்தியில் அமர்வதும் உன்னால்..
சிறு பட்டினி கொள்வதும் உன்னால்..
என் சந்திரன் வருவதும் உன்னால்..
என் ஜனனமும் மரணமும் உன்னால்..

என் உயிர் என்வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் மொழி கேட்பதும் கேட்பதும்
என் வழி நல்வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லறம் காப்பதும் காப்பதும்..
அது உன்னால்..
அது உன்னால்..
அது உன்னால்..

Wednesday 8 May 2013

ஜெயமோகனுடன் ஒரு நாள்..

ஜெயமோகனை ஏப்ரல் 28 அன்று திருச்சியில் சந்தித்தேன். என்னை போல 20 பேர் வந்திருந்தனர். தீவிர இலக்கியம் படித்த, அறிந்த மக்கள் நிறைந்த அந்த அறையில் ஜெயமோகன் சாருடன் ஒரு நாள் முழுக்க உரையாடியது ஒரு அற்புதமான அனுபவம்.
                                              


கற்பனையில் இருந்த ஜெயமோகனுக்கும், நேரில் பார்த்த ஜெயமோகனுக்கும் பலத்த வேறுபாடு இருந்தது. மிக இயல்பாக இருந்தார். இவரா "ஓலைச்சிலுவை, அம்மையப்பம்" போன்ற தீவிர படைப்புகளை தருகிறார் என்று தோன்றியது. வாசகனை இயல்பாக உணர வைக்கும் உரையாடல் தான் அவரிடம் நான் மிகவும் ரசித்தது. அறையில் நுழைந்து பெயரை சொன்னதும், "ஸ்ரீகாந்த், கார்த்திக் போன்ற பெயரில் பலர் உள்ளனர்." என்று சிரித்தார். மதியத்திற்குள் அங்கே நான்கு கார்த்திக் வந்துவிட்டார்கள்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா வரலாறு சன்னமாக இவருக்கு தெரிந்திருக்கிறது. கோவில்கள் பராமரிக்காமல் கிடப்பது, ஏரிகள் சீரழிக்க படுவது என பல்வேறு தளங்களில் பேச முடிகிறது. மது கேரளாவையும், தமிழகத்தையும் அழித்து வருவதை இவர் விரும்பவில்லை.

"பல கதைகளில் அறம் குறித்தும், அறம் சார்ந்தும் எழுதியுள்ளீர்கள். அறம் என்றால் என்ன?" என்ற கேட்டதற்கு, "ஒரு எழுத்தாளனிடம் அவன் படைப்பை விளக்க சொல்லக்கூடாது. அது தான் முதல் அறம்.." என்று நகைச்சுவையாக தொடங்கி வெகு தீவிரமாக விளக்கம் தந்தார். வியக்க வைக்கும் செய்திகள்..

கடல் படத்தில் Father சாமை முதல்முறை தேவாலயத்துக்கு அழைத்து செல்லும் காட்சியில், கோவில்குட்டி ஓஓஓஓ என்று கத்துவான். உடனே தேவாலயத்தின் உள்ளிருந்து பல நாய்கள் வெளியே வரும். அந்த காட்சியில் முதலில் கோவில்குட்டி "அல்லேலுயா.. அல்லேலுயா.." என்று கத்துவதாக தான் எழுதப்பட்டது. அதாவது அவனுக்கு சர்வமும் கர்த்தரே என்ற நோக்கில். ஆனால் சென்சார் சொன்னதனால் ஓஓ என்று கத்துவதாக மாற்றப்பட்டது.
                                            

கடல் முதலில் 200 பக்க நாவலாக ஜெயமோகனால் எழுதப்பட்டது. படம் வெளிவந்த பின் நாவல் வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தார். அதுபற்றி கேட்ட போது, "நாவலை இப்போது வெளியிட்டால் பலரும் நாவலுக்கும், சினிமாவுக்கும் உள்ள வேறுபாடுகளை அலச ஆரம்பிப்பார்கள். மணிரத்னத்திற்கு தேவை இல்லாத தொல்லை ஆகும். அதனால் அந்த முடிவை சற்று ஒத்தி வைத்துள்ளேன்." என்றார்.

மணிரத்னம் நாத்தீகர். அவரது படங்களில் மதம் சார்ந்த விஷயங்கள் இத்தனை அழுத்தமாக வந்தது கடலில் தான். இதை ஏற்று கொள்வதில் அவரை இத்தனை நாள் பின்பற்றி வந்தவர்களுக்கு பிரச்சனை இருக்கலாம் என்றதற்கு, "கடல் மணிரத்னம் கதை அல்ல. ஜெயமோகன் கதை. அதன் தொடக்கம் முதல் முடிவு வரை என் படைப்பே." என்றார்.

கடல் மேல் போடப்பட வழக்குகள் குறித்து கேட்டபோது.. "கடல் படம் தீவிர கிறிஸ்துவத்தை எந்த விதத்திலும் புண்படுத்தாமல் எழுதப்பட்டது. பெர்க்மான்ஸ் என்பது ஒரு புனிதரின் பெயர். அதை வில்லனுக்கு சூட்டியுள்ளனர் என்று கேஸ் போடுகிறார்கள். இது அபத்தம். பெயர் வைப்பது கதை எழுதுபவனின் உரிமை. மேலும் சென்சார் போர்டிலும் பல அரசியல் உள்ளது. பாலாவின் பரதேசியில் வெள்ளைகார கிறிஸ்துவ பெண்ணின் பின் நாக்கை தொங்க போட்டு நம் மக்கள் அலையும் காட்சி யாரையும் புண்படுத்தவில்லையா? சிறு சிறு குழுக்கள் தாங்கள் தான் கிறிஸ்துவ மதத்திற்காக போராடுகிறோம் என்று காட்டவே இவ்வாறு கேஸ் போடுகின்றனர். இறுதியில் மணிரத்னம் அந்த அமைப்புகளுக்கு பணம் கொடுத்தே சரி செய்தார். சினிமாவில் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் நஷ்டம் தான்." என்றார் ஜெயமோகன்.

சினிமாவில் ஜெயமோகனை இங்க்மார் மற்றும் அகிரா குரோசவா பெரிதும் பாதித்துள்ளனர். தமிழ் சினிமா மீது வருத்தம் தான். பாலு மகேந்திராவின் 'வீடு', மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' எதுவும் நல்ல சினிமா அல்ல என்றார். சினிமாவிற்கு ஒரு purpose வேண்டும். உதிரி உதிரியாய் எடுக்கும் சினிமா எப்படி நல்ல படம் ஆகும் என்று கேட்டார். ஜெயகாந்தன் இயக்கிய ஆரம்ப கால படங்கள் தமிழில் ஒரு புதிய அலைக்கு ஆரம்பமானது. ஆனால் அது தொடரவில்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத காணும்" போன்ற படங்களை நல்ல படம் என்று சொல்லும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது என்றார்.

விடைபெறும் போது அவரிடம் கையெழுத்து வாங்க அவரது புத்தகம் எதுவும் என்னிடம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் "Conversations with Mani Ratnam" என்று கொடுத்தேன். சிரித்து கொண்டே கையெழுத்திட்டார். "நல்ல புத்தகம்.. மிகவும் நேர்மையாக மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.." என்று பாராட்டினார். "என் பையன் அஜிதன் போல மிக மெலிதாக இருக்கிறீர்கள். உடல்நலத்தை கவனியுங்கள்" என்று கூறினார்.
                                                         
                 
தீவிர இலக்கியம் மேல் மெல்ல மெல்ல ஈடுபாடு வர தொடங்கும் நேரத்தில் ஜெயமோகன் போன்ற ஒரு மிக பெரிய ஆளுமையை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் படைப்பை ரசிக்கும் முன், அவருக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.

Monday 1 April 2013

கடல்

கடல் படத்தின் நஷ்டத்தை கண்டு கொந்தளித்து ஆளாளுக்கு தங்கள் வலைத்தளத்தில் எழுதி ஜெயமோகன் மற்றும் மணிரத்னத்தின் மீதுள்ள கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நாலாந்தர விமர்சனங்களை படித்த எனது சில எண்ணங்கள்..

கடல் படத்தை ஜெயமோகன் எழுதினார்.. மணிரத்னம் இயக்கினார்.. படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.. இது குறித்து கவலை பட வேண்டியது விநியோகஸ்தர்கள்.. ஒரு சராசரி ரசிகனுக்கு படத்தின் கலை மட்டுமே திருப்தி அளிக்க வேண்டும்.. அதன் வசூல் அல்ல.. ஹலோ தமிழ்சினிமா என்ற ஒரு தளத்தில் மணிரத்னத்திற்கு உலக சினிமா தெரியாது என்று எழுதியுள்ளனர். (எழுதியவருக்கு தெரியுமோ என்று தெரியாது.) உலக சினிமா தெரியாத ஒரு இயக்குனருக்கு வெனிஸ் திரைப்பட திருவிழாவில் "Glory to the Filmmaker" விருது வழங்குகின்றனரா? பெர்லின் திரை திருவிழாவில் இருவர் படம் சிறந்த படமாக தேர்வானது.. ஆனால் இந்த ஹலோ தளம் "இருவர் ஒரு flop.. அதை போல் கடலும் flop.." என்று எழுதியுள்ளது..

கலையை ஒரு துளி கூட கலை என பார்க்காமல் வெறும் வியாபாரமாக பார்க்கும் இது போன்ற கிருமிகள் இப்போது இணையம் எங்கும் வியாபித்து உள்ளன.. ஜிம்பாப்வே, லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகெங்கும் விருதுகள் பெற்ற படங்கள் மணிரத்னம் எடுத்தவை.. அது பற்றி அவர் பெருமையாக பேசியது இல்லை.. ஆனால் இந்த தன்னார்வ விமர்சகர்களின் நோக்கம் மணிரத்னத்தின் புகழை மறைத்து அவர் ஒரு சாதாரண இயக்குனர்.. அவரது வெற்றிகள் அதிர்ஷ்டம் என்றும், தோல்விகள் அவரால் ஏற்பட்டவை என்றும் காட்ட நினைக்கிறார்கள்.. சூரியனை நோக்கி கையை நீட்டி சூரியன் மறைந்துவிட்டதே என்று சொல்லும் ஒரு வகை மன திருப்தி பெறுகிறார்கள்..

இன்னும் சிலர் திரிகிறார்கள்.. மணிரத்னம் ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.. அதன் மூலம் ராஜாவின் புகழ் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது.. இந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு இசை அமைக்கும் ரஹ்மான் முன்  தங்கள் ஆதர்ச இசையமைப்பாளர் படங்கள் பேசப்படுவதில்லையே என்ற ஆழமான எண்ணம் இவர்களை இசையை இசையாக கேட்க விடுவதில்லை.. ரஹ்மானின் மிக சிறந்த பாடல்களை கூட சலிப்புடன் நிராகரிப்பார்கள்.. இந்த காழ்ப்புணர்ச்சியின் நீட்சியே ரஹ்மானை அறிமுகம் செய்த மணிரத்னத்தின் மீது வைக்கும் அபத்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம்..

கடல் :: பாவத்துக்கும், மீட்புக்கும் இடையே அலையும் இளைஞனின் கதையென பார்க்காமல் வெறும் ஹீரோ - வில்லன் என்ற ரீதியில் பார்க்கவே இவர்கள் பழகி உள்ளனர்.. படத்தின் படிமங்கள் இவர்களுக்கு புரிவதில்லை.. புரிய இவர்கள் முனைவது கூட இல்லை.. இவர்கள் உள்நோக்கம் படத்தை கடுமையாக விமர்சிப்பது.. படத்தின் குறைகளை மட்டும் குறித்துக்கொள்வது.. தன் தளத்தில் தனக்கு புரிந்த கதையை அசட்டு நகைச்சுவையுடன் எழுதி ட்வீட்டரில் பகிர்வது.. இந்த ஆதார குறிக்கோளுடன் வருபவர்களுக்கு பியா போன்ற தேவதை தன்மை நிறைந்த கதாபாத்திரம், தாமஸ் பாவமன்னிப்பு பெறும் ஆன்மீக படிமங்கள், கிறிஸ்துவத்தின் சாயலில் அமைந்த வசனங்கள், ஊரை ஆசீர்வதித்து நகர்த்தி செல்லப்படும் இயேசு சிலை என எதுவும் புரிவதில்லை..

செந்தில் போன்ற சில அமெச்சூர் விமர்சகர்கள் கடலில் முத்தக்காட்சி நீக்கப்பட்டது குறித்து கோபப்படுகிறார்கள்.. இதுதான் இவர்கள் ரசனை.. இவர்களுக்கு தேவை இதுதான்.. அதற்கான படங்களுக்கு செல்லாமல் மணிரத்னத்தின் படங்களுக்கு ஏன் செல்கிறார்கள்? இவர்கள் விமர்சனம் செய்வது தவறு அல்ல.. படம் வெளியான முதல் நாளே பார்த்து, தனக்கு புரிந்த ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து விமர்சித்து, 3000, 4000 பேருக்கு பகிர்ந்து, அனைவரையும் அதன் கலையுணர்ச்சியை புரிய அல்ல உணர விடாமல் செய்யும் இந்த கலைக்கொலை எத்தகைய கொடுமையானது..

சுஜாதா சொன்னது போல் "மணிரத்னம்" மணிரத்னம் என்பதாலேயே அவரை நிராகரிக்க பலர் உள்ளனர். அது தான் இப்போது ஜெயமோகனுக்கும் நடக்கிறது.. முன்னோடிகளின் சிரமம்.. விளக்கை சுற்றி திரியும் விட்டில் பூச்சிகள் போல் தான் இவர்களை பற்றி எழுதும் விமர்சகர்களும்.. அவர்கள் ஒளியில் வாழ்ந்து, புகழில் எரிந்து சாபவர்கள்..

Monday 18 March 2013

ஈழம்!

இலங்கை தமிழர் நலன் கருதி நடக்கும் உண்ணாவிரதம் தற்சமயம் கலை கல்லூரி மாணவர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. பொறியியல் மாணவர்களையும் பங்கு பெற சொல்லி எங்கும் தீவிர பிரசாரம் நடக்கிறது..

இந்த விஷயத்தை அரசியல், மனித நேயம் இந்த இரு வட்டத்துக்குள் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை.. தனி மனிதர்களாக ஒவ்வொரு தமிழனும் செய்த தவறு தான் இன்று ஈழத்தின் நிலைக்கு காரணம்.. ஏதோ ஒரு விதத்தில் நீங்களும், நானும் பிரபாகரன், பாலச்சந்திரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக்கு காரணமாய் உள்ளோம்..

இராஜபக்சே விருந்தினராக திருப்பதி சென்ற போது நாம் எந்த கிளர்ச்சியும் காட்டவில்லை .. பிரபாகரன் தாயார் ஒரு சிகிச்சைக்காக இங்கு வந்து திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. மில்லியன் கணக்கான மக்கள் 2010, 2011ல் கொல்லப்பட்டனர். அப்போதும் எந்த தீவிர போராட்டமும் நடக்கவில்லை.. பல ஆண்கள் நிர்வாணமாக சுட்டு கொல்லப்பட்டனர்.. அதை வீடியோவாகவும் பார்த்தோம்.. அப்போதும் எதுவும் செய்யவில்லை.. மொத்தத்தில் நாம் தேவைப்படும் போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை ..

இப்போது வெறும் உணர்ச்சிகரமான பிரச்சனையாக இதை பார்த்தல் சரி தானா? ஆட்சி மாற்றம் இலங்கையில் வருவதற்கு முன், இந்தியாவில் அல்லவா வர வேண்டும்?.. ஏதோ ஒரு அரசியல் ஆதாயம் இங்கு ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் உள்ளது.. இல்லையென்றால் கோடி மக்கள் கொல்லப்படும் போது ஒரு நாடே வேடிக்கை பார்த்திருக்காது..

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, ஜெகன் இலங்கையில் கொல்லப்பட்ட போது இங்கு ஒரு மாபெரும் கிளர்ச்சி நடந்தது.. நாம் சற்று கத்தி பின் ஓய்ந்தோம்.. இப்போது மீண்டும் அதே கதை நிகழ்கிறது..

உண்ணாவிரதம் இருபவர்களின் நோக்கம் தூய்மையானது.. அதை வரவேற்கிறேன்.. நம் போராட்ட முறை இந்த பிரச்சனைக்கு ஏற்றதா? இதுவே என் கேள்வி..

இது போன்ற சூழ்நிலையில் போராட்டதிற்கு எதிரான கேள்விகளை வைத்தால் "உனக்கு தமிழ் உணர்வு இல்லை.. இன உணர்வு இல்லை.. உன் குடும்பத்திற்கு இது நடந்தால் தெரியும்..:" என்று உணர்ச்சிவசப்பட தொடங்கிவிடுகிறார்கள்.. அதனால் ஒன்று "போராடு" இல்லை "சும்மா இரு" என இரண்டே கட்டத்துக்குள் தள்ளி விடுகிறார்கள்..

தற்போது இருக்கும் சொச்சம் தமிழர்களை முழுமையாக இங்கு அழைத்து வரலாம்.. ஏனெனில் சத்தம் இல்லாமல் பல சித்ரவதைகளை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.. ஆனால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்கு ராஜபக்சேயோ, மன்மோகனோ செவி சாய்க்க வேண்டும்..

அது நடக்கும் காரியமா என்பது தேவனுக்கே வெளிச்சம்.. 

தமிழீழ பிரச்சனை குறித்து இன்று எனது கல்லூரி மாணவர்களும் போராட்டம் செய்ய இருப்பதாக கேள்வி..

எளிதாக மாறும், உணர்ச்சிவசப்பட கூடிய மனநிலை உடைய பிரிவில் மாணவர்களும் உண்டு.. அவர்கள் "Emotional Intteligent" ஆக செயல்படுவது இல்லை.. இது இந்த விஷயத்தில் மட்டும் அல்ல.. பல கல்லூரி உள்விவகாரங்களில் கூட நான் பார்த்ததே.. அரசையோ, கல்லூரி நிர்வாகத்தையோ எதிர்க்கும் மனப்பான்மைக்கு எப்போதும் பல மாணவர்கள் தயாராக உள்ளனர்.. பற்ற வைத்தவுடன் கொளுத்த நினைக்கிறார்கள்..

போராட்டத்தின் விளைவுகள் நல்ல முடிவோ, இதே நிலையோ எதை தந்தாலும், போராட்டம் செல்லும் வழியில் எனக்கு உடன்பாடு இல்லை.. குறிப்பாக நேற்று நடந்த பல சம்பவங்கள் அதிர்ச்சி தருபவை..

சென்னை வந்த புத்த பிட்சுக்கள் அடித்து காயப்படுத்தப்பட்டது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.. தவறு செய்யாத தமிழ் மக்கள் அங்கு துன்புறுத்தப்பட்டது உண்மை.. அதன் பழியை இங்கு கழுவுவதா? சிங்களர்கள் அனைவரையும் ராஜபக்சே என நினைக்கும் மனநிலை பரவியுள்ளது..

மேலும் மதுரையில் ஒரு மாணவர் தீக்குளித்து இறந்ததாய் அறிந்தேன்.. இதன் நோக்கம் என்ன? பல மாணவர்களின் முகநூல் பதிவில் ராஜபக்சே கொடூரமாக கொல்லப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.. பொதுவாக இந்த எண்ணம் தான் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது.. தற்சமயம் இந்த ஈழ பிரச்சனை பெரும் உருவம் எடுக்க காரணம் பாலச்சந்திரன் மரணம்.. ஆக ஒரு உயிரை கொன்றதற்கு, இன்னொரு உயிர் பலி வேண்டும்.. அதை நிறைவேற்ற மற்றொரு உயிர் தன்னை அழித்துக்கொள்கிறது..

நாளை வரப்போகும் எந்த நல்ல தீர்வுக்கும் ஒரு தீக்குளிப்பு தான் விதையாக இருக்குமென்றால் அதற்கு ஜனநாயகமும், அமைச்சர்களும் தேவை இல்லை.. சுதந்திர உலகத்தில், இந்தியா போன்ற சுதந்திர தேசத்தில் உயிர் பலியிட்டு உரிமையை மீட்க தேவையில்லை..

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஒரு ஈழத்தமிழ் பெண் கூறியது, "தமிழர்கள் இங்கு செய்யும் ஒவ்வொரு போராட்டத்திற்கும், இங்கு நாங்கள் பாதிக்கப்படுவோம்.. நாங்கள் இப்போது தான் மீண்டு வருகிறோம்.. மீண்டும் ஒரு போரையோ, தாக்குதலையோ எங்களால் தாங்க முடியாது.." இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. தமிழர்களை அங்கு வைத்துகொண்டு நாம் இங்கு இலங்கையை எதிர்த்து தீவிர வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வளவு தூரம் நன்மை தரும் என்று தெரியவில்லை..

கல்லூரிகள் அவசரமாக காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்ட பின் போராடுவது அரசை எதிர்க்கும் போக்கென கொள்ளப்படும்.. முகநூலும், மீடியாவும் தூண்டிவிடும் போது மாணவர்கள் மிக வேகமாக, உணர்ச்சிவசப்பட்டு செயல்படுதல் சரியல்ல..

காலம் தாழ்த்தி நடத்தப்படும் இந்த போராட்டம் முறையான வழியில் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.. அது மட்டுமே தீவிர மாற்றத்தை தரும்.. வன்முறைக்கு பதில் வன்முறை அல்ல..

Thursday 17 January 2013

K.B sir is a Great guru :: Saran


This is my interview with Saran. He is a junior artist. He is a lucky guy working with legends like Maniratnam, K.Balachander and Kamal at an early age of his carrier. Here goes my interview regarding his experience in Kadal and Cine field in general.

Tell me about your Name, Native and Education.

My name is B.Saran and my native is Chennai only. I am studying 11th standard in St.Marys Boys school at Perambur.

                                                

You have done your first screen role in "Mudhal idam" film? How did you get the chance? 

By seeing "Variety".

Variety means?

Variety is a book, full of phone numbers of Artists in Cine field.

Fine.. How was your working experience in "Kadal"?

Wow! It was an amazing experience. I didnt expected this chance to act in a Maniratnam film. I am a fair boy but mani sir thought that i would be suitable for this role. Assistant directors Dhana and Sarjun sir gave me full practice regarding slang and flow for each and every dialogue. All the scenes that were shot in the sea were really a great experience. They changed me totally upside down. My big thanks is to Maniratnam sir and whole Kadal unit.

                                                  

You have also acted in "Vishwaroopam". How it was working with Kamal sir?

I did three scenes in that film including one scene with Kamal sir. It was also great time. But working in Kadal was really superb.

                                             

Working with a legend like Balachander sir?

It is a honour to work in K.B sir's serial. I am working on two of his serials. How lucky i am! He creates each scene. It is a wonderful time to train myself as an actor. In the beginning, I was angry since he scolded me. Later I realised he scolded only for my sake. With the passage of time, he became more affectionate with me. Still i wonder about his punctuality. He comes to spot by 8 A.M and leaves by 8 P.M. He is a great GURU.

                                             

Your upcoming films?

Just now Vishal's Samar got released. Now, I am eager about Kadal Kadal Kadal..

Finally, What is your future dream?

To become an engineer or an actor.

Tuesday 15 January 2013

KOCHADAYAAN Lyrics :: Vairamuthu


                                                         
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்...
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...

இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்

வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம் ?

Asku laska :: NANBAN :: Lyrics


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - ஐ
அஸ்த் அஸ்த் லைபே -
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே - லவ்
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ - ஒரு
காதல் உந்தன் மேலே!

அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன்
காதலைக் காட்டினேன்...

ஏனோ தன்னாலே உன் மேலே
காதல் கொண்டேனே!
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே!

ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு
வளைகோடு
நான் ஆய்கிறேன்!

ப்ளாட்டோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

தேஜாவூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி - நீ
வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என்
பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ - ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

Anbin vaasale :: Lyrics by Karky


நீ இல்லையேல்
நான் என் செய்வேன்?

அன்பின் வாசலே
அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவை
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்

நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உனை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ வான் மண் நீர் தீ...
எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும்
காற்றும் நீ தானே

கண்ணீரைத் தேக்கும்
என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால்
பூப்பூத்திடாதோ

பூவின் மேலே
வண்ணம் நீ தானே
வேரின் கீழே
ஜீவன் நீதானே

அன்பின் வாசலே
அன்பின் வாசலே

Elay keechaan :: Lyrics by Karky


ஏமா சீலா -நம்ம
கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ
அலைவீசி சிரிக்குறா

ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
கட்டு மரம் கொண்டா லே!
குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!

ஏளா! பாய் விரிச்சா... அய்யோ
வாவல் வாசந் தேடி
வாரான் கீச்சான் - ஒங் கீச்சான்
ராவோட கூவை கிட்ட கண்ண கேப்பான்
றாலோட றாலோட மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
புலிவேசம் போட்டு வருவான் கீச்சான்

ஹே... சடசட சடவென காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஒம் பேர பாடாதா?
ஒரு ஒரு ஒரு ஒரு ஓ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர

ஒனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக் கிறுக்கேன்
நீ வேணா சொன்னா
எங்க எங்க போவானோ தோமா?

ஒத்த அலையில மெதக்குற
ஓடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

நீ திடுதிடுக்க - என்ன
சுத்தி வளைக்க - நான்
வெலவெலக்க - தல
கிறு கிறுக்க

நீ பாத்த நொடியே - ஹே
பித்துப் பிடிக்க - என்
தூத்துக்குடியே ஒன்ன
தூக்கி இழுக்க! தூக்கி இழுக்க!

ஏ இத்தன மச்சம் - ஹே
எத்தன லட்சம் - அத
எண்ணி முடிச்சே - நாம
தூக்கம் தொலச்சோம்

ஏ ஒத்த பிடியா - நீ
மொத்தம் கொடுத்த - என்
அன்ன மடியா - என்ன
வாரி எடுத்த! வாரி எடுத்த!

ஓ ஓ ஓ ஓ ஓ வா லே! கொண்டா லே!
ஏலம் போடக் கொண்டாலே!
போகும் மேகம் மீனத் தூவும் கொண்டா லே!

ADIYE :: Lyrics by Karky


மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறனே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி றெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

Monday 14 January 2013

MUSIC IN MY GENES :: Abhay


This is my interview with Abhay jodhpurkhar, one who made us to feel heaven in his debut song "Moongil thottam" from Maniratnam's Kadal. Thanks to Abhay who accepted my request without any hesistation. Now i got musically tied with his song and personally addicted to his down to earth quality. Thanks to technology which helped to converse with Abhay via email who is miles away from my region. And here is Abhay's answers regarding his life before and after "Moongil thottam"::

                                                           
1. Tell me about your native, graduation. I read that you did your college in Chennai...

I am from Indore (MP),came to Chennai in 2009 for B.Tech in SRM University…Will be done with my degree within few months…Along with this, I had joined KMMC ( Rahman sir’s music school ) as part time.
I was spotted by Rahman sir during a Qawwali concert in KMMC. He then started calling me for recordings… So that’s how my musical journey started.

2. At what time you felt your connection with music?

I have always been passionate about music and have been listening to all kinds of Music…My family background is very musical so I was exposed to good music ever since my childhood… You can say that I have inherited Music in my genes...I have learned Hindustani Classical music, even though not regularly, during vacations and whenever I got free time from Academics.

3. How was your feeling when you had your dream debut by a legend like A.R.Rahman sir through a duet with HARINI mam?

It was truely a dream come true…to be launched by Rahman sir in A Mani Ratnam Sir’s film and to sing Vairamuthu Sir’s beautiful Lyrics that too in a duet with Harini Ma’m who is such a talented & experienced singer , is really huge honor for me…I feel blessed and Lucky to be a part of such dream team!

                                                        
4. What was your experience in working with Maniratnam sir? Did he gave you any notes or suggestions regarding song?

It was really an amazing experience. Mani sir helped me out with the exact pronunciation & diction of the Folk Slang…Harini mam also supported me a lot… After the recording he was very happy and said-“very good  singing Abhay”

                                                           
5. The lyrics of "Moongil thottam" was by a veteran poet Vairamuthu. And your diction did justice to the lyrics.. Did you made any home work for the song?

I have been listening to Tamil songs ever since I came  to Chennai… So in a way I was gradually getting the idea of diction by just imitating them, and I love the Tamil language so that’s how I got it…Vairamuthu Sir’s lyrics have inspired me so much and that’s how I could add soul to it.

6. How was Chennai concert experience? (Thai manne vanakkam of Rahman sir)

It was  the best lifetime achievement for me…to share stage with such legendary singer is really a huge opportunity and I thank Rahman sir for letting me be a little part of this concert… We all artists had a great time together and we became like a family during this concert.

                                           
7. Which is closer to your heart "Moongil thottam" or "Patsani thotta"?

Both are equally important to me… Moongil Thottam was recorded by Rahman Sir himself so it’s closest to my heart…and I could impart more depth in Patchani Thota so far as the feel is concerned because I got the hold of melody to little more extent as it was done later.

8. About your future songs or projects

You will soon come to know about them! It’s worth wait…let it be a Surprise!

9. You look charming. Hadn't you get offers to act as a hero?

( Laughter)  I can’t act! Music is my 1st priority and will always be,so no plans of acting!

10. Finally, Whats your pick from kadal other than "Moongil thottam"?

Elley Keechan...I just can't get over with this song no matter how many times I listen to it! It’s my favorite song in Kadal!

KEECHAAN :: RAHMAN :: KARKY


What follows is my status that i wrote when "Ale keechan" from Kadal got released as a single.

"Ale keechan" is out today.. A perfect fisher folk song.. 100% differs widely from other maniratnam-rahman songs..

The lyrics have many different fishy and village terms. Madhan karky has succeeded in his debut attempt of folk song.

"vaale kattumaram konda le.. gundu meena alli vara konda le" , "unakaga valai onnu, valai onnu virichiruken.. .... vilakenna oothikitu mulichiruken..""en thoothukudye" are some of the gems..

Rahman's voice suited the feel at its best. His high pitch and low pitch gave a village feel. And the music makes you to feel as if you are in sea..

The main highlight of the song is its second stanza. The fast beats and extra folky lyrics will surely make you smile..

This song just triggered the expectation level from 100 to 1000.. #KADAL

KADAL soundtrack :: Mindblown

Heard my most expected album of the year "KADAL".. Already mindblown with "Nenjukkulle" and "Ale keechaan".. I was bit nervous with the songs as excitement level killed me.. 
                                               
The first song that I heard is "Adiye".. The first and it is a best,.. The high pitch is killing.. And the lyrics.. Madhan karky can be proud of his poetic attempt like "மீன தூக்கி நீ ரெக்க வரைஞ்ச.. வானம் மேல நீ வீசி எரிஞ்ச.. பறக்க பழக்குறியே".. Sid sriram, everytime when he shouts "adiye", goosepumps..

"Moongil thootam" by Vairamuthu is the only duet of the album.. Lyrics are from his poem "idhu podhum enaku".. Harini and Abhay are mesmerising.. A perfect tune for night time.. 

                                                                    
"Chithirai nila" is again by vairamuthu.. A completely different genre.. The song is self motivating. The lyrics are from Vairamuthu's "Thaneer desam".. Vijay yesudas gave a beautiful powerful rendition..

"Magudi magudi" is a techno rap number.. I wonder y this song comes.. It made me to think whether "kadal" is a city story.. Electrical guitar, raps are peaking.. Suddenly a girl speaks.. Chinmayi did this portion.. And there starts the most romantic part of the song.. 

                                          
And finally, a great surprise for maniratnam fans is "anbin vaasale".. Yup.. A devotional song in maniratnam film.. A solo number by Haricharan.. The choir by girls praising lord is the backdrop.. This song is surely a mystery..

                                                
From the album, you cant guess anything.. You cant decide for whom each song is going to be on screen.. That is the success of Maniratnam.. Now its time to wait for visuals..

MANIRATNAM:: A Legend

After reading the book "CONVERSATIONS WITH MANIRATNAM" by Bharadwaj Rangan, I could strongly say that Maniratnam is probably the only Indian director who could merge parallel and commercial cinema in a right proportin.. Rightfrom the pallavi anupallavi, his films are unique and stands out with hidden screenplay motifs.. 


                                  
The way songs were used, lightning (which started a new trend called MANIRATNAM style), short-cut dialogues became his trademark.. While directors like shankar taking 100% commercial films with hardcore message, glamour, huge sets..., manisticks to stories of relationships and human minds.. 

In roja, the story was not whether kashmir belongs to us or them, but a girl who struggles in an alien land for her husband.. In bombay, mani doesnt concentrate on who is wrong (hindu or muslim), but about innocent couple or public who got affected by violence.. 

When people like gautam makes a throughout romance with artificial elements stretching out in each frame like english speaking leads, telling "i wanna, gonna etc..", mani had few romance scenes in his works that stands out for years.. Uyire/dilse is a cult classic that was so ahead of time.. Even now, people could not understand many notes in the film, but mani tried that in 1998.. 

Iruvar, personally my fav.film and mani's best film as said by him elevated the level of indian cinema.. I had never seen any films that touched such a difficult genre and story.. The way kalpana (aishwarya) and senthamarai (tabu) characters etched were stunning.. It was completely a forward movie of that time.. 

                                               
 Even in his latest RAVANAN, i could see the international theme it had.. People could not bear the concept in film which they heard in epics for eras.. Mani brilliantly brought out an illegal desire in veera with no shades of vulgarity but with essential erotic flavour.. I always wonder when people could see kalasala and all those ultrasexual songs with utter useless lyrics, why did they denied this.. It shows the fake lie cover of our people where they want to hid themselves.. 

Till date, the most masala hero RAJINIKANTH had one of his few good films with mani (thalabathy).. The classical NAYAKAN (as said by ppl godfather inspiration but entered best 100 films by TIME magazine along with godfather)emerged as a landmark film with kamal.. 

We can bet that gautam, shankar, dharani will never have an idea of touching something even half to that of anjali, kannathil muthamital or iruvar.. And finally, this book proved me that mani is not old fashioned but people here are old fashioned.. He is not out dated but people feel themselves happy with ballelakka type cinemas.. With a great dream about how he is sculpturing KADAL, i can call MANIRATNAM - a veteran, visionary and winner.

Sunday 13 January 2013

Story of silk:: Dirty picture

இன்று "டர்ட்டி பிக்சர்" படம் பார்த்தேன்.. 

                                        

சில்க் ஸ்மிதா என்ற பெண் இந்த சமுதாயத்தில் சந்தித்த அவமானங்கள், துயரங்கள், துரோகங்கள், ஏளனங்கள் அப்படியே படமாக விரிந்திருக்கிறது..

வித்யா பாலன் போன்ற தேர்ந்த நடிகையால் மட்டுமே இது போன்ற கனமான, தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும்.. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சில்க்காக வாழ்ந்திருப்பதால் தேசிய விருது தகுதி அடைந்துள்ளார்..

                                   

தன்னை இயக்குனர் வேண்டாம் என்று சொல்லும் போதும், இருக்கும் பணத்தில் சாப்பிடாமல் சினிமாவிற்கு செல்லும்போதும், தன் முதல் படத்தில் தன் பாட்டு இடம் பெற்றுள்ளதை பார்க்க தவிப்பதும், ரசிகர்கள் தன்னை திரையில் கொண்டாடுவதை பார்த்து மெல்லிய கர்வம் காட்டுவதும் வித்யாவின் நடிப்பிற்கு சாம்பிள் காட்சிகள்..

                                        

விருது வாங்கிவிட்டு தன்னை வெறுக்கும் மக்களை நோக்கி பேசும் காட்சியில் சில்க் சமுகத்தின் மீது கொண்ட கோபத்தை வீசுகிறாள்.. நாகரிகம் என்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டே ரகசியமாய் தன் படங்களை ரசிப்பவர்களை சாடுகிறாள்.. 

இண்டர்வல் காட்சிக்கு முன் அவள் சொல்லும் வசனம் - "இண்டர்வல்க்கு பின் மாற நான் ஒண்ணும் சினிமா இல்ல.. சில்க்..".. அவள் திரையில் மட்டும் நடிக்கிறாள்.. நிஜ வாழ்க்கையில் அல்ல.. 


                                       

காதல் தோல்விகள், தொழில் நஷ்டங்கள் அவளது வாழ்க்கையை புரட்டி போடுகின்றன. 

இறுதி காட்சியில் தன் வீடு நோக்கி வரும் போது கண்ணாடிகளில் தன் பழைய அழகிய முகங்கள் தெரிவது போன்ற பிரம்மை ஏற்படுகிறது.. அந்த காட்சியில் வித்யாவின் நடிப்பு உலக உயரங்களை தொடுகிறது.. முழு ஒப்பனையுடன்  சிகப்பு புடவை அணிந்து தற்கொலை செய்து கொள்கிறாள் சில்க்..
            
                                        

கன்னத்தில் அறையும் வசனங்களும், உறுத்தாத இசையும் துணை இருந்தாலும் வித்யாவின் நடிப்பில் படம் எதார்த்தத்தின் உச்சத்தை அடைகிறது..

இந்த சில்கின் கதை ஏன் தமிழில் முதலில் எடுக்கவில்லை? 


                                        

குருவி, சிவாஜி  போன்ற படங்களின் பட்ஜெட் செலவில் கால் பங்கு இந்த படத்திற்கு போதும்.. ஆனால் இந்த படம் சமூகத்திடம் கேட்கும் கேள்விகள், நம் படங்கள் கேட்காதவை.. 

இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக, மிக கண்ணியமான படைப்பு "தி டர்ட்டி பிக்சர்"..

Favourite song :: Lyrics

இந்த பாடல் இடம்பெற்றுள்ள படம் சந்தோஷ் சிவனின் "உருமி".  மொழி மாற்ற படம். முதலில் மலையாளத்தில் வந்த படம் இது.
                  
           வைரமுத்து இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த பாடல் ஒரு போர் வீரனுக்கும், போர் குணம் மிகுந்த பெண்ணுக்கும் இடையே வரும் காதலை சொல்லும் பாடல். ஹரிஹரன், ஸ்வேதா மோகன் பாட, தீபக் தேவ் என்னும் மலையாள இசையமைப்பாளர் இசையில் உருவான பாடல்.. திரையில் பிரித்விராஜ், ஜெனிலியா நடித்த பாட்டு..



                                     
"உறை விட்டு வந்த வாளோ?
ஒளி விட்டு வந்த வேலோ?
திருமகன் இவன் யாரோ?
திருவுளம் புரிவாரோ?


                                      


மடல் தொட்டு வந்த காற்றோ?
மலை தொட்டு வந்த ஊற்றோ?
ஒலியோ? ஒலியின் தெளிவோ? பிரிவோ?
விடமோ? மதுவோ?
இதில் நீ எதுவோ?

யாரோ? நீ யாரோ?
யாரோ? நீ யாரோ?

                                 


அதோ.. அதோ.. 
உன் இரு கரம் முறுக்கி களிறொன்று எறிகின்றாய்..
இதோ.. இதோ..
என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்..
அழகின் கர்வத்தில் ஆணி அறைகின்றாய்..
ஆடையோடு ஆவி கொண்டாய்..
என் உயிரை விழியால் உண்டாய்..
மலை போல் எழுந்தாய்.. மழை போல் விழுந்தாய்.. 

                                 
                                          
காதல் பூக்களின் வாசம்,
உன் கூந்தல் எங்கிலும் வீசும்..
பார்வைகள் என்னும் படை எடுப்பாலே,
பாதத்தில் கவிழ்ந்திடும் தேசம்..
எனை வெல்லும் பாகம் மிக பெரிது..
நன் தோற்கும் பாகம் மிக சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்கள் தாண்டுதல் அரிது..
உன் அழகினால் என்னை அழிக்கிறாய்..
நீ ஆணை கொள்ளும் பெண் நெருப்பா?"